இல்லாததை சொன்னால் நரகம் தான

இல்லாததை சொன்னால் நரகம் தான்
தாய், தந்தையர் தங்கள் மகனைத் தீய வழியிலிருந்து காக்க
வேண்டும். நல்ல வழியில் செலுத்த வேண்டும். வித்தை கற்பிக்க
வேண்டும். பொருத்தமான மனைவியைத் தரவேண்டும். காலம்
வரும்போது தங்கள் செல்வத்தை அவன் கையில் கொடுக்க
வேண்டும்.
* அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். அர்த்தமற்ற
சொற்களால் ஆக்கப்பட்ட ஆயிரம் பேச்சைவிட, அர்த்தமுள்ள ஒரே
சொல் மேலானது. அதை ஒருவன் கேட்பானேயாகில்
அமைதியாகிவிடுகிறான்.
* சொல்லியவாறே செய்கையில் நடக்கும் ஒருவனின் ரம்மியமான
பயனுள்ள பேச்சு வர்ண நிறைவுள்ள அதிக அழகானதொரு புஷ்பம்,
வாசனையும் பெற்றிருப்பது போன்றது.
*வர்ண ஜொலிப்பு நிறைந்த அதி அழகான ஒரு பூ நறுமணம்
பெற்றிராவிட்டால் எப்படியோ அது போன்றது செயலில் காட்டாமல்
வெறும் வாயளவில் மட்டும் மிக ரம்மியமாகப் பேசும் ஒருவனின்
பயனற்றச் சொற்கள்.
* உண்மையான பேச்சை உரைப்பவன் முரட்டுத்தனமில்லாமல்
அறிவுத் தெளிவுடன் இனிமையாகப் பேசுபவன் எவனோ எவர் மனமும்
புண்படாமல் பேசுபவன் எவனோ அவனே சரியான மனிதன்.
* பொன் நாணயங்களை அடை மழையாகப் பெய்தாலும், ஆசைகள்
அடங்காமல் பெருகும்.
*கருத்து முயற்சியில் முன்னேறியவர்கள். அதைத்
தெளிவாக உணர்ந்து கொண்டு அந்தக் கருத்து முயற்சியிலேயே
பேரானந்தம் கொள்கிறார்கள். ஆன்றோர்கள் காட்டிய அறிவு
நெறியில் பெரு மகிழ்ச்சியடைகிறார்கள்.
* இல்லாததைச் சொல்பவன் நரகத்திற்குப் போகிறான். ஒன்றைச்
செய்துவிட்டு அதை, நான் செய்யவில்லை என்று
பொய்யுரைப்பவனும் அவ்வாறே நரகத்திற்குச் செல்கிறான்.