அரிசி, ரவையில் வண்டா? : இதப் படிங்க முதல்ல… : “கிச்’ டிப்ஸ்
*பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
* உளுத்தம் பருப்பை வடைக்கு ஊற வைக்கும்போது, ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால், நிறைய எண்ணெய் உறிஞ்சும்.
* சிறு துண்டு பெருங்காய கட்டியை மஞ்சள் மற்றும் மிளகாய் தூளுடன் போட்டு வைத்தால் பூச்சுகள் வராது.
* சர்க்கரை டப்பாவில் மூன்று அல்லது நான்கு கிராம்பை போட்டு வைத்தால் எறும்பு வராது.
* சர்க்கரை டப்பாவை சுற்றி மஞ்சள் பொடி தூவி வைத்தால், எறும்பு வராது. அல்லது பெருங்காயத் துண்டுகள் உள்ள டப்பாவின் மேல் சர்க்கரை டப்பாவை வைத்தால் எறும்பு வராது.
* தேன் பாட்டிலில் இரண்டு மிளகை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது.
* ரவையில் பூச்சி வராமல் தடுக்க ஆறு அல்லது ஏழு கிராம்புகளை போட்டு வைக்க வேண்டும்.
* அரிசியில் சிறிது போரிக் பவுடரை போட்டு வைப்பதன் மூலம் பூச்சி வருவதை தவிர்க்கலாம்.
* புதினாவை காய வைத்து, அதை பவுடராக்கி, 10 கிலோ அரிசிக்கு 50கிராம் பவுடரை போட்டு வைத்தால் புழு, வண்டு வராது. இது பூச்சி வருவதை தடுப்பது மட்டுமின்றி உணவின் சுவையையும் கூட்டும்.
* பூண்டை உரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், குளிர்ந்த நீரில் போட்டு ஊற வைத்து, அதன்பின் தோலை உரித்தால் எளிதில் வந்து விடும். அல்லது தனித்தனி பல்லாக எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் நன்றாக வதக்கி விட்டு உரித்தால், சுலபமாக உரிக்கலாம்.
* பச்சைநிற காய்கறிகள் நிறம் மாறா மலிருக்க, சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும்.
* ஊறுகாயில் பூஞ்சை படர்வதை தடுக்க, எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பின் ஊற்ற வேண்டும்.
* கேக்கில் முட்டை சேர்த்து செய்யும் போது, முட்டை வாடை அடிக்கும். கேக் மாவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தால் வாடை இருக்காது.
* புதிய பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை எடுக்க, பாத்திரத்தை சிறிது சூடாக்கி, பின் ஸ்டிக்கரை எடுத்தால் எளிதில் வந்துவிடும். அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் மூலமும் ஸ்டிக்கரை எடுத்துவிடலாம்.
* சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், உருளை கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை எடுத்துவிடும்.
* காலி பிளவர் சமைக்கும் போது, அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் சேர்த்து சமைத்தால் வெண்மை நிறம் மாறாது.
* பெருங்காயத்தை சம அளவு சாதாரண உப்புடன் கலந்து வைத்தால், அது பிரஷ்ஷாக இருக்கும்.
* முட்டை வெகு நாட்கள் கெடாமல் இருக்க, எலுமிச்சை பழசாறு கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
* வெந்நீரில் போட்டு வைத்து, பின், எலுமிச்சை பழத்தை பிழிந்தால், அதிக அளவில் சாறு கிடைக்கும்.
* கையில் பட்ட கெரசின் வாடை போக, கடலை மாவினால் கையை கழுவ வேண்டும்.
* பூண்டு அல்லது மீன் வாடை போக, உப்பு தண்ணீரில் கையை கழுவிவிட்டு, பின் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் .
* இட்லி மாவு புளிக்காமல் இருக்க, மாவில் சிறிய துண்டு வாழை இலையை போட்டு வையுங்கள்.
0 மறுவினைகள் இது வரை ↓
இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.