முகப்பு > கட்டுரைகள் > வழி நடத்தும் நன்னடத்தை!

வழி நடத்தும் நன்னடத்தை!

இளைஞர்களே, நீங்களும் நிர்வாகி ஆகலாம். அதற்கான நிர்வாக மேலாண்மைத் திறன்களை உங்களில் ஏற்படுத்திக் கொள்ள தேவையான பயனுள்ள தகவல்களை இந்த பகுதியில் அளித்து வருகிறோம்.

நிர்வாகி என்பவர் தானும் உழைத்து, பணியாளர்களையும் வழிநடத்துபவராக இருக்க வேண்டும் என்பதை கடந்த வாரம் விளக்கி இருந்தோம். இந்த வாரம் நடத்தை பற்றிய பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான நிர்வாகங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும்போது மதிப்பெண் சான்றிதழையே பெரிதும் கவனிக்கிறார்கள். அது அவர்களைப் பற்றிய எல்லா விஷயங்
களையும் தெரிவிக்கும் என்று சொல்ல முடியாது. மதிப்பெண் சான்றிதழானது அவர்களின் நினைவுத்திறனையோ அல்லது கவனிக்கும் திறனையோ மதிப்பிடுவதாகக் கொள்ளலாம். அதுவும் அவர் அந்தக் காலக்கட்டத்தில் இருந்த நிலைக்கு ஏற்ப எடுத்த மதிப்பெண்களே தவிர வாழ்க்கை முழுவதற்குமான மதிப்பீடு என்ற கோணத்தில் கருத்தில் கொள்ள முடியாது.

சான்றிதழுடன் இணைத்து நடத்தைக்கான (காண்டாக்ட் சர்ட்டிபிகேட்) சான்றிதழும் கொடுக்கப்படும். இந்த சான்றி தழ்களிலும் மாணவர்கள் நலன்கருதி பெரும்பாலும் நேர்மறையான குறிப்புகளே இருக்கின்றன என்பது வெளிப்படை. ஆனால் அவரது நடத்தையே நமது நிர்வாகத்துக்கு அவசியமானது.

நடத்தையை சான்றிதழ்கள் மூலம் ஓரளவு அறிய முடியுமே தவிர முழுத் தெளிவைத் தந்துவிடாது. எனவே ஒருவரது பின்புலத்தை அறிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது நிர்வாகியின் கடமை.

இதற்காக தங்கள் சேவை சார்ந்த மற்ற நிறுவனங்களுடன் வைத்திருக்கும் தொடர்பைக் கொண்டு பணி தேடி வருபவரின் நடத்தையை அறிய முயற்சிக்கின்றன. அது சரியான வழிமுறைதான். இதைக்கூட சில நிறுவனங்கள் செய்வதில்லை. வருபவரின் வார்த்தைகளை மட்டும் நம்பி பணியில் சேர்த்துக் கொள்கின்றன.

ஒருவர் ஒரு பணி நிறுவனத்தில் ஓராண்டுக்கு மேல் நிலைத்து வேலை செய்ததே இல்லை. 6 ஆண்டுகளில் 6 நிறுவனத்துக்கு மாறியவர். புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை பல நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர் என்ற முறையில் முன்னுரிமை கொடுத்து எடுத்துக் கொண்டது. உயர்ந்த பதவி கொடுத்து கவனித்து வந்தது. புதிய நிறுவனம் என்பதால் போட்டிகளை சமாளிக்க பல யுக்திகளை கையாண்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அடுத்த வருடமோ அந்த நபர், நான் அங்கு உயரிய பொறுப்பை வகித்தேன், அதன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று கூறிக்கொண்டு போட்டியான மற்றொரு நிறுவனத்துக்கு மாறிவிட்டார். அந்த புதிய நிறுவனம் சற்று தடுமாறித்தான் போனது.

உரிய விவரங்களை சேகரிக்காமல் பணி அளித்துவிடுவது பின்னாளில் நிர்வாகத்துக்கு இதுபோன்ற இடைறுகளை ஏற்படுத்தலாம். எனவே நடத்தையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரின் நடத்தையை அவரது பாவனைகளை வைத்து ஓரளவு அறியலாம். அவர் உங்கள் முன் அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே கணிக்கலாம். சிலர் நமக்காக ஒரு மாதிரியும், தனியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், பழக்கம் உடையவர்கள் வட்டத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட பண்புடைய ஒருவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது சிக்கலானது. எனவே ஆரம்பத்திலேயே அவரை கண்காணித்து அறிந்து கொள்ள வேண்டும்.

“ஒருவனைப் பற்றி அறிய வேண்டுமா? அவனிடத்தில் பொறுப்பை கொடுத்து பாருங்கள்” என்று கூறுவார்கள். இந்த விதத்தில் ஒரு பணியைக் கொடுத்தும் ஒருவரின் நடத்தை, செயல்படும் விதத்தை அறியலாம்.

ஒருவரின் கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை ஓரளவு கிக்க முடியும். அதன் அடிப்படையிலேயே ஒருவரின் நடத்தை பரிசோதிக்கப்படுகிறது. நமது சட்ட மேதை அம்பேத்கார், `வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது’ என்று கூறிஇருக்கிறார். நேருவோ, “கடந்த கால வரலாறைப் படிக்கும்போது நிகழ்காலம் புரிகிறது, எதிர்காலத்தையும் கணிக்க முடிகிறது” என்கிறார். இந்த உண்மை மொழிகளை நிர்வாகத்தோடும் பொருத்திப் பார்க்கலாம். அதாவது பணியாளர், போட்டியாளரின் வரலாறை (நடத்தை, கடந்தகாலத்தை) அறிவதன் மூலம் நமது நிர்வாகத்தை திறம்பட செய்ய முடியும்.

இப்படி பண்புகளைக் கொண்டு தேர்வு செய்யும்போது சில பிரச்சினைகள் வரலாம். அதாவது அவரின் நடத்தை உங்கள் விருப்பப்படி அமைந்திருந்தும், நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றாலும் பணியில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் தனி மனிதர்கள் சூழலின் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள்
தான்.

ஆகவே கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, நம்பகத்தன்மை இவற்றை எதிர்பார்த்து ஒருவரை தேர்வு செய்வதால் மட்டும் சிறந்த பணியாளராகவோ, நிர்வாகியாகவோ செயல்பட மாட்டார். ஒருவரது நடத்தையை கண்காணித்து பொறுப்பு கொடுத்தால் அதை அவர் சரியாக செய்து முடிப்பார் என்பது கண்கூடு.

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.