இல்லம் > கம்ப்யூட்டர் செய்தி > சோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்

சோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்

28/11/2009

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட முடியும் என்றாலும், பல இல்லங்களில் சிறுவர்கள் கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேஷன்கள் என்னும் சாதனத்தைப் பயன்படுத்துவதனைக் காணலாம். இவற்றிற்கான கேம்ஸ் தயாரிப்பில் சோனி நிறுவனம் அண்மையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளது. தமிழில் நம் நாட்டிற்கேற்ற கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்துள்ளது. இதற்கென சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன் மென்ட் மற்றும் கேம் சாஸ்திரா சொல்யூசன்ஸ் இணைந்து பல கேம்ஸ்களைத் தமிழில் உருவாக்கித் தந்துள்ளன. பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் பி.எஸ்.2 (ரூ.499) மற்றும் பி.எஸ்.பி. (ரூ.999) ஆகியவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இவை ஒரு கதை போல் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பிறந்தது முதல் வெளிநாடுகளில் வசித்த ஒருவன், தன் மூதாதையர் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அந்த கிராம விளையாட்டுக்களில் பங்கு பெறுகிறான். ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கிறான். இதில் 1. பசிசி எனப்படும் தாயக்கட்டம், 2. ஆடு புலி ஆட்டம், 3. காற்றாடி விடுதல், 4.கபடி,5.கிட்டி எனப்படும் கில்லி தண்டா மற்றும் 6. நடன விளையாட்டு என கேம்ஸ்கள் தரப்பட்டு, நாம் முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடும் வகையில் இயங்குகின்றன. கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் மறைந்து வரும் நாட்களில், சோனி நிறுவனம் முயற்சி எடுத்து இவற்றை பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் கொண்டு வந்துள்ளது, நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,841 other followers

%d bloggers like this: