தொகுப்பு

Archive for the ‘உடல்நலம்’ Category

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

இதைத் தொடாதீங்க…!-எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

நமது உடம்பின் எரிபொருள் உணவுதான். எனவே நீங்கள் சாப்பிடுவது, நாள் முழுவதும் உங்கள் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் உங்களுக்குள் உற்சாகத்தை பாய்ச்சுவதைம், சில உணவுகள் உங்களைத் தொய்ந்துபோக வைப்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்…

சர்க்கரை அளவைக் கூட்டும் உணவுகள்

உங்களுக்கு `ஸ்வீட்’ சாப்பிடும் ஆசை அதிகமா? அது, `தடுக்கபட்ட’ உணவுகளில் உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடக் கூடும். உதாரணமாக, தித்திபான இனிப்பு, `கேக்’ போன்றவை. அவை உங்களின் உற்சாகத்தை உயர்த்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது தற்காலிகமானது. பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும்.

சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது உங்களின் முளையின் உஷார்த்தன்மையைக் கூட்டும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய நீங்கள் தளர்ந்து போய் விடுவீர்கள்.

மாற்று

மேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனைவெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக்கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

பொரித்த உணவுகள்

அதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் உங்களை பொரித்த உணவுகளிலிருந்து விலக்காவிட்டால், இதோ இன்னும் ஒரு காரணம். சிஸ், பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது நாம் சோம்பலாக உணர்வோம்.

மாற்று

சோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், டோக்லா, ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.

உற்சாக முட்டும் பானங்கள்

உற்சாகமுட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் `காபீனால்’ உடனடி சக்தியை அளிக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது நீங்கள் மேலும் தளர்ந்தவராக ஆகிவிடுவீர்கள். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாக முட்டும் பானங்களை பருகுவோர் விஷயத்தில் இது தெளிவான உண்மை. உற்சாகமுட்டும் பானங்கள் ஆரம்பத்தில் `காபீனின்’ உதவியால் முளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் நீங்கள் சுத்தமாகக் களைத்து போய்விடுவீர்கள்.

மாற்று

உங்களுக்கு பிடித்த எந்த பழத்தைம் யோகர்ட் சேர்த்துச் சாப்பிடுங்கள். ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.

பதபடுத்திய உணவுகள்

கிரீம் பிஸ்கட்டுகள், நுடுல்ஸ், உப்பிட்ட உருளைக்கிழங்கு சிஸ், கிரீம் நிறைந்த சாலட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம்

உள்ளது. சோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை `டீஹைட்ரேஷன்’, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதபடுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருபதற்காக `ஹைட்ரேஷன் பிராசஸுக்கு’ உட்படுத்தபடுகின்றன. அவை பல்வகை `டிரான்ஸ்பேட்ஸை’ ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிபிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.

மாற்று

வறுத்த தானியங்களை சாபிடலாம்.

காபி

நாம் `டல்’லாக உணரும்போது சூடாக ஒரு `கப்’ காபி சாபிடலாம் என்று நினைப்போம்- அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எணத்தில். ஒரு கோப்பை `ஸ்ட்ராங்’ காபி உங்களை விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான்.

காபியில் உள்ள `காபீன்’, உங்களின் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

அதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவு படுத்தும். நீண்ட இடைவேளைக்கு இடையே கொஞ்சம் கொஞ்சம் காபி சாப்பிடுவது நல்லது.

மாற்று

`லெமன் டீ’ அல்லது காய்கறி சூப் சாபிடுங்கள்.

மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!


பிறந்த குழந்தையானது முதல் மாதத்திலிருந்து பன்னிரண்டாவது மாதம் வரை அதாவது ஒரு வருடம் வரை படிப்படியாக எப்படி, என்ன வளர்ச்சிகளைக் காண்கிறது தெரியுமா? இதை குழந்தை பெற்ற பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதம்

பிறந்த குழந்தையை தூக்கும் போது, அதன் தலை நேராக நிற்காமல் விழும் தலையோடு சேர்த்து தூக்க வேண்டும். அதை குப்புறப் படுக்க வைத்தால், அதன் இடுப்பு, கைகள் மற்றும் கால்களைவிட சற்று உயரத்தில் இருக்கும். அதன் உள்ளங்கையைத் தொட்டால், கைகளை மூடிக் கொள்ளும்.

இரண்டாம் மாதம்

கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளும், இடுப்புப் பகுதியைக் கீழே வைத்துக் கொள்ளும்.

மூன்றாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலை லேசாக நிற்கும். கட்டை விரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பிக்கும்.

நான்காவது மாதம்

தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கும். நிற்க வைக்க இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்தால் பிடித்துக் கொள்ளும்.

ஐந்தாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.

ஆறாம் மாதம்

எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். முன்னங்கைகளைத் தரையில் அழுத்தமாக ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.

ஏழாம் மாதம்

பிடிமானமில்லாமல் உட்காரக் கற்று கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நிற்கும். தனது கைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளும்.

எட்டாம் மாதம்

கொஞ்சம் தடுமாற்றமின்றி நன்றாகவே உட்காரும். உடலின் மொத்த எடையையும் தன் கால்களில் தாங்கியபடி நிற்கப் பழகும். டம்ளர், பால் பாட்டில் போன்றவற்றைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.

ஒன்பதாம் மாதம்

பத்து நிமிடங்கள் வரை தடுமாறாமல் உட்கார முடியும். எதையாவது பிடித்தபடி நிற்க ஆரம்பிக்கும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகக் குவிக்கக் கற்றுக் கொள்ளும்.

பத்தாம் மாதம்

முன் பக்கமாகச் சாய்ந்து அங்கே கிடக்கும் பொருட்களை எடுக்கும். கைகளை ஊன்றியபடி தரையில் தவழ ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக் கொள்ளும்.

பதினோராம் மாதம்

உட்கார்ந்த நிலையில் உடலைத் திருப்ப அதனால் முடியும். முழங்கால்களைத் தரையில் ஊன்றியபடி தவழ ஆரம்பிக்கும். நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். ஆட்காட்டி விரலால் தரையில் எதையாவது எழுதுகிற மாதிரிச் செய்யும்.

பன்னிரண்டாம் மாதம்

கைகளையும், கால்களையும் உபயோகித்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும் கூட ஸ்திரமாக நிற்கப்பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்ளும்.

உடல் சொல்லும் உண்மைகள்!

பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம்.

பெண்களுக்கு 18,19 வயதிலேயே திருமண ஆசை தலை தூக்கலாம். ஆனாலும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரியான பருவம்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவிலும் தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது.

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவு விட்டுப் போகக் கூடாதே என்றோ, சொத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது நம் நாட்டில் சகஜமான விஷயம். இரத்த உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தாய்க்கோ, தந்தைக்கோ உள்ள வேண்டப்படாத மரபணு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சியின்றி பிறக்கவோ, குறைப் பிரசவம் நிகழவோ கூடும். பெற்றோருக்கு இதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண்ணின் கடமை.

எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவுகளில் ஈடுபடக் கூடாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்த்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள நினைக்கவே கூடாது. அதனால் கருத்தரிக்கும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைத்து விட்டாலோ அவை மூலம் ஏற்படும் மன அதிர்ச்சி, அவளது வாழ்க்கை முழுவதும் தொடரும். எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழகினாலும், இந்த விஷயத்திற்குத் தன்னை விட்டுக் கொடுக்கும் பெண்,பிறகு அந்த வாலிபனையே மணந்து கொண்டாலும்,அவனிடம் சுய மதிப்பை இழந்து விடுவாள். காரணம் திருமணத்துக்கு முன்பே இவள் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவள் தானே என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்பட்டிருக்கும்.

திருமண வாழ்க்கை என்பது பெண்களைப் பொறுத்த வரை முற்றிலும் மாறுபட்ட புதியதோர் உலகம். எனவே இந்த வாழ்க்கையின் மூலம், தான் இழக்கப் போகிறவற்றையும் பெறப்போகிறவற்றையும் உணர்ந்து உடலளவிலும்,உள்ளத்தளவிலும் பக்குவமடைய வேண்டும் அவள்.

கர்ப்பிணிகளை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங்

இன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது; அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை அளவோடு வாக்கிங் செல்வதுதான் நல்லது. 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும் என்றும் டிப்ஸ் கொடுக்கின்றனர் டாக்டர்கள்.
கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அந்த கர்ப்பக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும். அவ்வாறு களைப்பு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.
சிலர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில் இரவில் தூங்க வெகுநேரமாகும் சூழ்நிலை ஏற்படலாம். கர்ப்பக்கால களைப்பின்போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வதுதான் நல்லது. அதில், இடைïறுகள் ஏற்படும்பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது.
மேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை கட்டாயம் செய்யக் கூடாது.
சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற்பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு செய்யலாம். அல்லது, வாக்மேனில் இசை கேட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

சின்ன சின்ன செய்தி -உடல்நலம்

நவம்பர் – மார்ச்
குளிர் காலத்தில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம். ஒருவரால், அவரின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து குளிரை தாங்க முடியும். ஆனால், குளிரால் தொற்றும் தொற்றுக்கிருமியை சாதாரணமாக ஒதுக்க முடியாது. கோடை காலத்தை விட, மழைக்காலம், குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும்; தொற்றும். அதனால், நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராகவே இருப்பது நல்லது.
“சாட்’ வரும் பருவம்
ஆங்கிலத்தில் “சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு, குளிர் காலத்தில் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைட்டமின் “டி’ இல்லாததால் ஏற்படும் பருவ உடல் நிலை பாதிப்புகளை இது குறிக்கும். உடல் வலி, காய்ச்சல் உட்பட எல்லா பாதிப்பும் இதில் அடங்கும். வைட்டமின் “டி’ சத்து, சில உணவு வகைகளில் தான் கிடைக்கிறது. குளிர்காலத்தில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது முக்கியம்.
வைரஸ் – பாக்டீரியா
குளிர் , மழைக்காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக்கிருமிகள் தான். கோடை காலத்தில் வருவதை விட, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை குளிர் காலத்தில் யாருக்கும் வரத்தான் செய்யும்.
அதே சமயம், பாக்டீரியா தாக்குதல் என்பது, குளிர் காலத்தை விட, கோடை காலத்தில் தான் பரவும். அதிலும், மிக அதிக வெப்பம் இருந்தால் தொற்றாது; இரண்டுங்கெட்டானாக வெப்ப சூழ்நிலை இருந்தால், பாக்டீரியாக்கள், பிராணிகள், பறவைகளில் இருந்து தொற்றும்.
ஹாச்… ஹாச்
ஹாச் என்று தும்முவதில் ஆரம்பித்து ஜலதோஷம் போன்ற பிரச்னைகள், இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் மாசுகளால் தான் ஏற்படுகிறது. அலர்ஜியால், சளி, இருமல், கண் எரிச்சல், மூக்கு ஒழுகுவது, தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படும். இதனால், எந்த வேலையும் ஓடாது; தூக்கமும் வராது. டாக்டரிடம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது தான் சரி.
காய்ச்சி குடிங்க
எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நல்லது பயக்கக்கூடியது குடிநீர் தான். மழைக்காலத்தில் பாதுகாப்பான நீராக குடிக்க சூடாக்கி குடிப்பது தான் சரியானது. ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை குடிக்கலாம். ஆனால், பலரும் ஏதோ காரணத்தால் அதை கண்டுகொள்வதில்லை. இது தவறானது; தண்ணீர் குடித்து வந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. பளபளப்புக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
வீட்டுக்குள் நசநச
மழை, குளிர் காலத்தில் இன்னொரு பிரச்னை, வீட்டில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுவது தான். அளவுக்கு அதிகமான பேர் புழங்கும் அறையில் இருந்து எளிதாக தொற்றுக்கிருமி பரவி விடும். பலவீனமானவர்களை அது உடனே தொற்றி விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படிப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். அதனால் தான் ப்ளூ காய்ச்சல், ஜலதோஷம் சுலபமாக பரவுகிறது.
வைட்டமின் “டி’
வைட்டமின் “டி’ மிகவும் முக்கியமானது; அது தான் தோல் பாகங்கள் பளபளப்புக்கு காரணமாகிறது. சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் இந்த வைட்டமின் “டி’ குளிர் காலத்தில் கிடைக்காது. தோலுக்கு பளபளப்பை தருவது மட்டுமின்றி, எலும்பு பாதுகாப்புக்கும் காரணமாகிறது. அதனால், பெண்களுக்கு தான் இந்த வைட்டமின் இல்லாமல் பாதிப்புகள் வரும்.
சீசன் அலர்ஜி
சீசன் அலர்ஜி என்றால் என்ன தெரியுமா? மரம், காற்று, சிறிய பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றால் பரவும் கிருமிகள் மூலம் ஏற்படும் அலர்ஜி பாதிப்புகள். கோடைக் காலங்களில் தான் இதுபோன்ற அலர்ஜி மாசுகள் பாதிப்பை ஏற்படுத்தும். மரத்தில் இருந்து விழும் வித்தியாசமான துகள்கள், நாய் போன்ற பிராணிகளிடம் இருந்து பரவும் வாயு, படிமம், சுற்றுச்சூழல் மாசுகள் தான் இப்படிப்பட்ட அலர்ஜிகளுக்கு காரணம். மழை, குளிர் காலங்களில் இந்த பிரச்னை இருக்காது.
அதிகாலையில்
வயதான சிலர் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் இந்த குளிர் காலத்தில் சற்று நேரம் கழித்து எழுவது நல்லது. அதுபோல, உடற்பயிற்சியை செய்வதையும் வெயில் சற்று வந்து வெதுவெதுப்பு ஏற்பட்டதும் செய்யலாம். குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம். ஜலதோஷம், காய்ச்சல் வருவது பெரும்பாலும் அதனால்தான்.
தர்பூசணி மகிமை
அலர்ஜி போக்கவும், அழகாக தோற்றமளிக்கவும் சிறந்த, செலவில்லாத ஒரு உணவுப்பொருள் உள்ளது தெரியுமா? அது தான் தர்பூசணி. இதை அப்படியே சாப்பிடலாம். ஜூசாகவும் குடிக்கலாம். உடலுக்கு மிக நல்லது. எதிர்ப்பு சக்தியை வளர்க்க வல்லது இது.வெள்ளரி போலவே, தர்பூசணியும் முக அழகு ஏற்படுத்த “பேஸ் பேக்’காக உதவுகிறது.

கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை

கடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.

‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.

‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.

கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.

கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.

கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.

கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

துரத்தும் தும்மலை விரட்டும் மூலிகை

மூலிகை கட்டுரை
இரவில் காற்று கூட புகுந்து விடாமல் கதவை மூடிக்கொண்டு தூங்குவதால் நமது அறையின் வெப்பநிலை நமது மூச்சுக்காற்றின் சுழற்சியால் சற்று அதிகரித்துவிடுகிறது. இதிலும் கொசுவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல வேதிப்பொருட்களையும் எரிய விடுவதால் ஏற்கனவே அதிகரித்த அறையின் வெப்பநிலை இன்னும் அதிகரிப்பதுடன் அறையின் உள்ளே தங்கியுள்ள காற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மாசடைய தொடங்குகிறது.
இதே காற்றை நாம் மீண்டும், மீண்டும் சுவாசிப்பதால் நுரையீரலின் சவ்வு பகுதிகள் உணர்விழந்து, மூளையின் கட்டுப்பாட்டுக்கு அடிபணியாமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கின்றன. அதிலும் நாம் உறங்கும் பொழுது நம்மையறியாமலேயே வாய் வழியாகவும் மூச்சுவிட்டு, மூக்குப்பாதை மட்டுமின்றி, உணவுப்பாதை மற்றும் தொண்டைப்பாதையும் வறட்சியடைய செய்து விடுகிறோம். இதனால், இயற்கையாகவே சுவாசப் பாதையின் உட்பகுதிகள் வலுவிழந்து, அவற்றின் உட்புறமுள்ள மயிர்கற்றைப் போன்ற உறிஞ்சுகளின் செயல்பாடு குன்றி, நுண்கிருமிகளை தடுத்து வெளியேற்றும் ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஆனால், காலையில் கண்விழித்துஎழும் நாம் அறைக்கதவை திறந்தவுடன் வெளியிலுள்ள குளிர்ந்த காற்றை எதிர்கொள்கிறோம்.
குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, மூச்சுப்பாதை மற்றும் கபால அறைகளை குளிரச் செய்வதால் திடீரென சுருங்கி, விரியும் மூச்சுக்குழல் மற்றும் தொண்டைப்பாதையின் தன்னிச்சையான எதிர்ப்பே தும்மலாக மாறுகிறது. ஆகையால்தான் கடும் பனியில், வெட்டவெளியில் தூங்கி எழும் பொழுது ஏற்படாத தும்மல், மூடிய அறையில் தூங்கி எழும் காலைப்பொழுதில் நம்மை துரத்த ஆரம்பித்துவிடுகிறது.
அடுக்குத் தும்மலால் கழுத்து, பிடரி, கீழ் மார்பு வலி, தொண்டை வறட்சி, மூக்கு, கண், உதடு எரிச்சல், தலைவலி, மூக்கடைப்பு, மூக்கு கோணுதல், மூக்கின் உட்புறங்களில் ஒருவித அரிப்பு என பல உபாதைகள் உண்டாகின்றன. சிலருக்கு அடுக்குத் தும்மலால் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் வாயுப்பிடிப்பும் உண்டாகிறது.
அல்பீனியா கேலங்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜிபெரேசியே குடும்பத்தைச் சார்ந்த அகன்ற இலைகளையுடைய புல் போன்ற செடியின் வேர்தண்டே பேரரத்தை என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் அல்பீனியா அபிசினேரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சிற்றரத்தை என்ற வேறு வகை செடிகளும் காணப்படுகின்றன. பேரரத்தை வேர்களிலுள்ள மெத்தில் சின்னமேட், சினியோல், டீபைனின் ஆகியன தொண்டை மற்றும் மூச்சுப்பாதையிலுள்ள தசைகளின் இறுக்கத்தை குறைத்து, அங்கு தேங்கியுள்ள கபத்தை வெளியேற்றுகின்றன. இவை சளி சவ்வின் அதிக சுரப்பை கட்டுப்படுத்தி, செல் அழிவையும் தடுத்து, மூச்சுப்பாதையின் மென்மையான சவ்வை பாதுகாக்கின்றன.
பேரரத்தை, சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்த பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 2 மேசைக்கரண்டியளவு நீரில் கொதிக்க வைத்து 60 மி.லி.,யாக சுண்டியப் பின்பு வடிகட்டி சாப்பிட சளியினால் ஏற்படும் இருமல், காய்ச்சல், தொண்டைவலி நீங்கும்.
பேரரத்தையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராமளவு தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி மற்றும் இருமல் நீங்கும். இதை வாயிலிட்டு மென்று, எச்சிலை உள்ளே விழுங்கி வந்தாலும் தொண்டையில் காணும் உறுத்தல் தீரும். இதனை வெந்நீர் விட்டு மைய அரைத்து தொண்டை மற்றும் மார்பில் லேசாக தடவி வர சளி நன்கு வெளியேறும். இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

பழங்களைத் தோலை உரிக்காதீங்க!

தோலை உரிக்காதீங்க!

சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:

விலங்கு புரதம் வேண்டாம்

புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.

பால்பொருட்களைத் தவிர்க்கலாம்

உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

எண்ணை உண்மை

நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.

சமைக்கும் முறையை மாற்றுங்கள்

எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.

முழுமையாகச் சாப்பிடுங்கள்

பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், சாஸ்களையும் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையுமஞ அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக ஆட்டாவைப் பயன்படுத்தலாம்.

அதிகமாக அலச வேண்டாம்

காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச் செய்தால் நணங்கள் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.

பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்

உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரமஞ நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.

குரங்கைப் பின்பற்றுங்கள்

இயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை அது நிச்சயமாகத் தோலை உரித்துச் சாப்பிடும். அதே பாணியை நீங்கள் உங்களின் உணவு முறையிலும் பின்பற்றுங்கள். தோல் உரிக்கத் தேவையில்லாத காய்கறிகள், பழங்களைத் தோல் உரிக்காதீர்கள்!

ஆரம்பிச்சாச்சு குளிர்! -அலர்ஜி முதல் ஆஸ்துமா வரை பாதிக்கும்

* அலர்ஜி முதல் ஆஸ்துமா வரை பாதிக்கும்
* இதய பாதிப்புள்ளோர் முழு உஷார்
வெயில் காலத்தில் கூட தாங்கி விடலாம்; ஆனால், மழைக்காலம் தான் யாரையும் பாடாய்படுத்தி விடும். மூக்கை சிந்துவது முதல் காய்ச்சல் வரை வலம் வரும். அதையும் தாண்டி, குளிர்காலத்தில் தான் “வீக்’கான பலரும் முழு உஷாரில் இருக்க வேண்டும். அதிகாலையில் வாக்கிங் போவது முதல், உணவுக்கட்டுப்பாடு வரை கவனத் தில் இருந்து சிதறி விடக்கூடாது; டாக்டர் சொல்படி கேட்டு நடந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால்…?
ஒன்று, நிலைமை மோசமாகி விடும்; மருத்துவமனையில் ஏகப் பட்ட பணம் இழக்க வேண்டியிருக்கும்.
இதய நோயாளியா?
குளிர் காலத்தில் தான் பலருக்கும் அலர்ஜி சுலபமாக, உடலில் கோளாறுகளை ஏற்படுத்தி விடும். குறிப்பாக, ஆஸ்துமாவுக்கு குளிர் காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக்குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் ரொம்பவும் கடுப்பை ஏற்றிவிடும். சுவாசக்கோளாறுகளை விட, இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு தான் குளிர்காலம் “பரம எதிரி’யான பருவம். இவர்கள் மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது தான். கோடை காலத்தை போல நினைத்து குளிரில் வெளியில் சென்று வர முடியாது.
ஏன் ஆபத்து மிகுந்தது?
குளிர் காலத்தில் இதய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன; சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடுவதால், இதய பாதிப்புக்கு காரணமாகிறது.
* குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.
* வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
* உடலில் வெப்ப சக்தி தேவை. இந்த வெப்பத்தை தருவதற்கு இதயம் வேலை செய்வது முக்கியம். இதய வால்வுகள் வேலை செய்தால் தான் அங்கிருந்து ரத்தம் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்; ரத்தத்தில் ஆக்சிஜன் இருப்பது அவசியம். குளிர்காலத்தில் இது குறைந்து விடும்.
* அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது; குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும்.
* அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவும் குறையும்.
இடம் மாறலாமா?
குளிர் அதிகம் உள்ள டில்லி, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து சென்னை, கோல்கட்டா, மும்பை போன்ற இடங்களுக்கு மாறினால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாமா என்று கேட்கலாம். வெப்ப இடங்களுக்கு சென்றால், பாதிப்பு வரவே வராது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட இடத்தில் உள்ள வானிலையில் பழக்கப்பட்டவர்கள், வேறு இடங்களுக்கு சென்றால், அங்கு “பாடி கிளாக்’ சீராக சில மாதம் பிடிக்கும்.
அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்னை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்டர் சொல்படி நடப்பதே நல்லது.
யாருக்கு பாதிப்பு அதிகம்?
அறுபது வயதை கடந்தவர்கள் பொதுவாகவே குளிர் காலத்தில் அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை “மூட்டை’ கட்டி வைக்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தடுக்க முடியாதா?
குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது; ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.
* நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம்.
* காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
* குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும.
100 ஐ தாண்டினால்…
* ரத்த ஓட்டம் ஏற்படுத்த இதய சுருக்கியக்கத்தின் போது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை அறிவதுதான் “சிஸ்டாலிக் பிளட் பிரஷர்’ இது 100 ஐ தாண்டக்கூடாது.
* எதுவும் சாப்பிடாமல் எடுக்கும்போது எடுக்கப்பட்ட சர்க்கரை அளவு 100 மில்லியை தாண்டக்கூடாது.
* எல்.டி.எல்.,கொலஸ்ட்ரால் (கெட்ட கொழுப்பு) 100 ஐ தாண்டக்கூடாது.
* அதுபோல, ட்ரைகிளிசரைட்ஸ் 100 ஐ தாண்டக்கூடாது.
அதனால், குளிர் காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்து மிகவும் உஷாராக இருப்பது முக்கியம்.