அற்புதம் நிறைந்த ஆவாரம்பூ!!
பொதுவாக கிராமப்புறங்களில் ஆவாரம் பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை பயன்படுத்துகின்றனர்.
சங்க காலத்தில்
கருப்பு நிற உணவுகளுக்கு இவ்வளவு மவுசா.???
கருப்பு உணவுகள் புதிய சூப்பர் உணவுகள் ஆகும். நாம் வண்ணமையமான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். கீரைகள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இருப்பினும் கருப்பு நிறங்களைப் பற்றி குறைவாகப் பேசப்படுகிறது!
அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்…?
வெல்லம், எடையைக் குறைக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுகிறது.
<!–more–>
சளித்தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்கள் வெல்லத்தை வெந்நீரில் அல்லது டீயில் கரைத்து அருந்தலாம். வெல்லம் உடலின் நொதிகளை ஊக்குவித்து, ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் வலிகளையும் சரிப்படுத்தும்.
வெல்லம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், வயிற்றை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுவதால் பல்வேறு நோய்களைத் தடுத்து கோடைகாலத்துக்கு ஏற்ற உணவுப் பொருளாக உள்ளது.
ரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களைப் பராமரிக்க உதவுவதன் மூலம் வெல்லம் உடல் சோர்வடைவதைத் தடுக்கிறது. ஓரளவு வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது, ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்ய உதவும்.
வெல்லத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் கனிமச் சத்துகளும் இயற்கை எதிர்வினைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன. வெல்லம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.
வெல்லத்தில் நிறைந்திருக்கும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. வெல்லத்தின் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமிலங்களின் அளவை சரிவரப் பராமரிக்க உதவுவதால் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழிசெய்கிறது.
நல்லெண்ணெயின் பயன்கள்!!
நல்லெண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
சுவையான பலாப் பழம்: எப்படி பார்த்து வாங்குறது? எப்படி கட் பண்றது?
முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். அதிக இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
வைட்டமின்கள் ஏ மற்றும் சி, தயாமின், ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், துத்தநாகம் மற்றும் நியாசின் போன்றவற்றின் ஆற்றல் மிக்கது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அறியப்படுகிறது.
பல ஆரோக்கிய மருத்துவ குணங்களை கொண்டுள்ள ரம்பை இலை !!
ரம்பை இலை பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலை வகைகள்.
<!–more–>
கறிவேப்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான் சாப்பிட வேண்டும்.
மிகமுக்கியமாக இது ஒரு நறுமண பொருள். இறைச்சியில் சேர்க்கும் பொழுது ஒரு அற்புதமான மணத்தையும் கொடுத்து இறைச்சியை மிகவும் மென்மையாக மாற்றிவிடும்.
ரம்பை இலை ஒரு தனித்தன்மையான மணத்தை கொடுக்கக்கூடியது. இது உடலில் ஏற்பட கூடிய உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது. தலையில் ஏற்படக்கூடிய பொடுகை குறைக்கக்கூடியது.
இந்த அன்னப்பூர்னா இலைகளை “கிழக்கின் வெண்ணிலா” என்றும் அழைக்கின்றனர். இந்த இலைகள் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த இலைகளில் இயற்கையாகவே நறுமணம் மற்றும் சுவை இருப்பதால் இவை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
தயிரை எப்படி சாப்பிட்டால் நோய் தூர விலகி ஓடும்? தெரிந்துக் கொள்ளுங்கள்…
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதில் எதை எந்த விதத்தில் கலந்து சாப்பிடுவது நோய்களை தூரவிரட்டும் என்பது தெரியுமா? பொதுவாகவே அனைவரும் தினசரி தயிர் சாப்பிடுகின்றனர். தயிர் (curd) பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம் (calcium), புரோட்டீன் (protien), வைட்டமின்(vitamin) என பல்வேறு சத்துக்களைக் கொண்ட தயிர் ஒரு சஞ்சீவனி மருந்து என்றே கூறலாம்.
உடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…!
ஆங்கிலத்தில் சாப்ரன் எனவும் ஹிந்தியில் கேசர் எனவும் அழைக்கப்படும் குங்குமப்பூ ஒரு பண்டைய மசாலா. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இந்த நேர்த்தியான மற்றும் விலையுயர்ந்த மசாலா பணக்கார சமையல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். கிரேக்க சமையல் கலாச்சாரம் முதல் இந்திய சமையல் மரபு வரை, இந்த பிரீமியம் மசாலா உலகம் முழுவதும் அதன் வழியைக் குறித்தது. இந்த மசாலா பல நாகரிகங்களால் அதன் மருத்துவ நன்மைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
ஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை!
ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.