வங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!
விழிப்புணர்வுகள் வந்து கொண்டிருந்தாலும், இன்றளவிலும் மக்களின்
ஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்?
இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை ‘இன்டர்நெட் புரட்சி’ என்றுதான் சொல்ல வேண்டும். ஜியோ வருகைக்குப் பிறகு ‘டேட்டா ப்ளஸ்’ நாடாக இந்தியா இன்று மாறியிருக்கிறது. இப்போது கடைக்கோடி இந்தியனுக்கும், `போதும்… போதும்’ என்கிற அளவுக்கு அதிகமான டேட்டா கிடைக்கிறது. இதனால் டிஜிட்டல் சார்ந்த புதிய தொழில்கள்
உலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன?
இந்தியப் பொருளாதாரம் மீதான தனது பார்வையை ‘மூடி’ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை முன்பு இருந்ததைவிட தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
40 வயது… காப்பீடுகள், முதலீடுகள்! – நடுத்தர வயதினருக்கு நச் ஆலோசனை
நாற்பது வயதைத் தாண்டும்போதுதான் நம்மில் பலருக்கும் சேமிப்பு, முதலீடு குறித்த சிந்தனையே பெருக்கெடுத்து ஓடத்தொடங்குகிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபின் கல்விக் கட்டணங்கள் நம் கழுத்தைப் பிடிக்கத் தொடங்குவது இந்த வயதில்தான். தீராத கால்வலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், மூட்டுத் தேய்மானம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது என உடல்நலக்கோளாறுகளை மருத்துவர்கள் பட்டியலிடுவதும் இந்த வயதில்தான். இதற்கான மருத்துவச் செலவு, நோயைவிட மிக மோசமான பயத்தினை நம்மிடம் உருவாக்குவதாக உள்ளன.
அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்!” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்
நம் நாட்டின் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் சர்வதேசப் பொருளாதார நிபுணரான டாக்டர் அனந்த நாகேஸ்வரன். தமிழக எல்லையான தடாவில் இருக்கும் ஐ.எஃப்.எம்.ஆர்-ன் டீனாக இருக்கும் அனந்த நாகேஸ்வரன், சி.எஃப்.எ இந்தியாவின் சென்னைக் கிளை சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு, உலகப் பொருளாதாரம் இன்றைக்கு எப்படியிருக்கிறது என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்வதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியவை இனி…
மாற்று முதலீட்டுத் திட்டங்கள்… ஓர் எச்சரிக்கை!
இந்திய முதலீட்டுச் சந்தை என்பது கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பரிணாமங்களைச் சந்தித்து வருகிறது. சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்குமுன்பு நிலவிவந்த முதலீட்டுச் சூழல் இன்றைக்கு இல்லை. பல்வேறு புதிய வடிவங்களில் இன்றைய முதலீட்டுச் சூழல் மாறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் முதலீடுகள் என்பது வங்கி மற்றும் நிறுவன வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் என்று ஒரு குறுகிய முதலீட்டுச் சூழலாகவே இருந்து வந்துள்ளது. விஷயம் தெரிந்த சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளனர்.
முதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது?
சென்னை மெட்ரோ ரயிலில் ஒருவர் தன் நண்பரிடம் சொன்னது…
“யாருக்குமே தெரியாமல் வீக் எண்டுக்குக் குடும்பத்துடன் போய் மகிழ்ச்சியாக இருக்க வீடு வாங்கினேன். இந்தத் தகவல் இன்கம் டாக்ஸ்காரங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுனு தெரியல. எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்காங்க!’’
ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, ரெகுலர் பிளான் மற்றும் டைரக்ட் பிளான் என இரண்டு வகைகள் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ளன. வங்கிகள், ஆன்லைன் நிறுவனங்கள், ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள், அட்வைஸர்கள் போன்ற பலராலும் ரெகுலர் பிளான்கள் விநியோகிக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்தால், அது டைரக்ட் பிளான். டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்பவர்களுக்கு விநியோகிப்பாளர் கமிஷன் இல்லாததால் லாபம் சற்று அதிகமாகக் கிடைக்கும்.
2019 – 20 வரிச் சேமிப்பு முதலீடு… ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!
வருமான வரியை மிச்சப்படுத்துவது எப்படி என நிதியாண்டின் ஆரம்பத்திலேயே நாம் யோசிக்கிறோம். ஆனால், அதைச் செயல்படுத்துவதோ கடைசி நேரமாகத்தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது.
பொதுவாக, இந்தியாவில் வருமான வரிச் சேமிப்பு என்பது நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதாவது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டுமே அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
வீட்டுக் கடன்… இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா!
இன்றைய சூழலில், இ.எம்.ஐ எனும் மூன்றெழுத்தை உச்சரிக்காதவர்கள் மிகக் குறைவு. அதைப் பயன்படுத்த விரும்பாத சம்பளக்காரர்களும் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, நம் எதார்த்த வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த இ.எம்.ஐ.
இ.எம்.ஐ செலுத்துவது என்பதே ஒருவிதமான அவஸ்தைதான். வாங்கிய பொருளிற்கான இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் தொடங்கி, பணத்தைச் செலுத்தி முடிப்பது வரை எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவம்தான் கிடைக்கிறது.