புதுமை!மளிகைக்கடையிலும் வங்கிக்கணக்கு: தெருமுனைக்கு வருகிறது வங்கிச்சேவை
வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை; ஏ.டி.எம்., மையங்களில் பட்டனை தட்டினால், நம் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதுபோல, டெலிபோன், மின்சார, தண்ணீர் கட்டணங்களை கட்டவும், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ், ஷாப்பிங் உட்பட பல சேவைகளை செய்து கொள்ளவும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் முறைகளும், ஏ.டி.எம்., மையங்களும் பயன்படுகின்றன. 24 மணி நேரமும் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகையில், குக்கிராமங்களுக்கும் வங்கிச்சேவை சென்றடைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் அடிக்கடி சொல்லி வருகின்றன. இதுபோல, எங்கும் எப்போதும், 24 மணி நேரமும் வங்கிக்கணக்குகளை கையாள வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை இன்னும் செய்து தர வேண்டும் என்றும் எண்ணுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி, இதுதொடர்பாக திட்டத்தை தயாரித்தது. அதன்படி, எந்த நேரத்திலும், குக்கிராமமாக இருந்தாலும், வங்கியில் கணக்கு ஆரம்பித்து, பணத்தை உடனுக்குடன் கையாள வசதியாக புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, மளிகைக்கடைக்காரர் முதல் மருந்துக்கடைக்காரர்கள் வரை நியமிக்கப்படுவர்; இன்சூரன்ஸ் ஏஜன்ட் போன்றவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் , வங்கியின் “பிசினஸ் கரஸ்பாண்டன்ட்’டாக (பி.சி.,) செயல்படுவர். இவர்களுக்கு வங்கிக்கணக்குகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்து கொடுத்து, பணம் வாங்கி டிபாசிட் செய்யவும், பணம் கேட்டால் கணக்கில் இருந்து தரவும் தெரிந்திருக்க வேண்டும்.
பக்கத்து ஊரில் உள்ள வங்கியுடன் இந்த, வர்த்தக பிரதிநிதிகள் தொடர்பு வைத்திருப்பர்; வாடிக்கையாளர்களும் இவர்களிடம் பணம் டிபாசிட் செய்யலாம்; பணத்தை கணக்கில் இருந்து பெறலாம். மற்ற சேவைகளையும் இந்த பிரதிநிதி செய்து தருவார்; எல்லாவற்றுக்கும் இவருக்கு குறிப்பிட்ட கமிஷன் தொகையை வங்கி அளிக்கும். அவரே வாடிக்கையாளரிடம் இந்த கமிஷன் தொகையை வசூலிக்கக்கூடாது. மளிகைக் கடை வைத்திருப்போர், பொது தொலைபேசி பூத் நடத்துவோர், நியாய விலைக் கடை நிர்வகிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர், அரசு சிறுசேமிப்பு துறை முகவர்கள், இன்சூரன்ஸ் முகவர்கள் என்று பல தரப்பட்டவரும் பி.சி.,க்களாக பணியாற்றலாம்.
வங்கியின் சேவைகளை செய்யும் முகவராக இந்த பிரதிநிதிகள் செயல்படுவர். வங்கிக்கணக்கு விஷயத்தில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும், அவர்கள் இணைக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சரி செய்வர். இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டால், குக்கிராமங்களிலும் வங்கி சேவை எளிதில் மேற்கொள்ள முடியும். அதன் மூலம், வங்கியின் செயல்பாடு பல மடங்கு அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி -மூலிகை கட்டுரை
அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.
சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்
பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக்
காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.
46 ஆண்டுக்குப்பின் புத்தரின்அஸ்தி கண்காட்சிக்கு வருகிறது
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் “உலக புத்தநெறி மாநாட்’டில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கிறது; 46 ஆண்டுகளாக யாரும் பார்த்திராத, புத்தரின் அஸ்தி கண்காட்சிக்கு வைக் கப்பட உள்ளது.புத்தர் தன் இறுதிக் காலத்தில் தனது அஸ்தி மீது “ஸ்தூபம்’ எனப்படும் புத்த கோவில்கள் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி அவர் இறந்த பிறகு அவரது அஸ்தி, பற்கள், எலும்புகள் இவற்றைப் புதைத்து ஸ்தூபங்கள் கட்டினர்.அசோகச் சக்கரவர்த்தி, கலிங்கப் போருக்குப் பிறகு, புத்தரின் நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடித்து, நாடு முழுவதும் அனுப்பி ஸ்தூபங்கள் கட்டினார்.பிரபல தொல்பொருள் ஆய் வாளர் பி.சுப்பாராவ், சமாலாஜி என்ற பகுதியின் அருகிலுள்ள தேவ்னி மோரி என்ற இடத்தில் உள்ள கி.பி., நான்காம் நூற்றாண் டைச் சேர்ந்த ஸ்தூபத்திலிருந்து, புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஒரு செப்புப் பாத்திரத்தைக் கண்� டடுத்தார்.அது கி.பி., மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்போது அந்தப் பாத்திரம், குஜராத்திலுள்ள எம்.எஸ்., பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையிடம் உள்ளது.
அத்துறையின் தலைவர் கே.கிருஷ்ணன் இதுபற்றிக் கூறுகையில்,”உலக புத்தநெறி மாநாட்டில்’ இந்த அஸ்தி ஜனவரி 15ம் தேதி முதல் இரண்டு நாட்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும். இதற் கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.தொல்பொருள் துறைப் பேராசிரியர் சோனாவானே கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் இந்த அஸ்தி 1962-63 லிருந்து இருந்து வருகிறது. மிக முக்கியமான தலைவர்கள் மட்டுமே இதைப் பார்த்துள் ளனர். பார்த்தவர்களைப் பற்றி பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த செப்புப் பாத்திரத்தின் வெளிப் புறத்தில் “தாசபால சரீர நிலைய’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு புத்தரின் அஸ்தி இருக்கும் பாத்திரம் என்று பொருள்’ என்று விளக்கினார்.
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள்
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு, கேது பகவான்கள் மகர, கடக ராசியிலிருந்து தனுசு, மீன ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆயினர். அவர்கள் அங்கு ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு, 09.06.2011 அன்று விருச்சிக, ரிஷப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆவார்கள்.
—கே.சி.எஸ். ஐயர்
குரு பகவான் பெயர்ச்சி
இந்த விரோதி ஆண்டு மார்கழி மாதம் 4-ம் தேதி (19.12.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு (விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை) குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இங்கு அவர் 1.5.2010 வரை சஞ்சரித்துவிட்டு, அதி சர கதியில் 2.5.2010 அன்று மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர் அங்கு மீன ராசியில் 24.7.2010 அன்று வக்கிரமடைந்து, வக்கிர கதியிலேயே பின்னோக்கி சஞ்சரித்து 3.11.2010 அன்று கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு 19.11.2010 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, கார்த்திகை மாதம் 17ம் தேதியன்று (3.12.2010) மீன ராசிக்கு நேர்கதியில் பெயர்ச்சி ஆகிறார். ராகு, கேது பகவான்கள்.
தோன்றிய வரலாறு
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கிடைத்த அமுதத்தை உண்ண இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட போட்டா போட்டியைத் தீர்த்து வைக்க ஸ்ரீமஹா விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். அசுரர்களை தன் அழகால் வசியப்படுத்தி, அமுதத்தை தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது “ஸவர்பானு’ என்கிற அசுரன் தனக்கு அமுதம் கிடைக்காது என்று உணர்ந்து, சூரியன்-சந்திரன் இருவருக்கும் இடையே தேவ ரூபமெடுத்து அமர்ந்து அமுதத்தை வாங்கி உண்டான். இதை சூரிய-சந்திரர்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் எடுத்துச் சொன்னார்கள். உடனே ஸ்ரீவிஷ்ணு பகவான் தன் கையிலிருந்த அகப்பையால் ஸவர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் தலை முதல் மார்பு வரை கழன்று, தனியாக உருண்டது. மீதி உடல் பகுதி, தனியாக வேறு இடத்தில் விழுந்தது. அமுதம் உண்டதால் தலை பாகமும், உடல் பாகமும் உயிரோடு இருந்தன. தலை பாகத்தை “பைடினஸன்’ என்கிற மன்னன் எடுத்து வளர்த்தான். இவரே ராகு! தன் கடும் தவத்தால் பாம்பு உடலைப் பெற்று கிரக அந்தஸ்தும் பெற்றார். தனியாக விழுந்து கிடந்த மீதி உடல் பாகத்தை மினி என்கிற அந்தணர் எடுத்து வளர்த்தார். இவரே கேது! ஞான மார்க்கங்களை அந்த அந்தணரிடமே கற்று, விஷ்ணுவை நோக்கி கடும் தவம் செய்து பாம்புத் தலையைப் பெற்று, கிரகப் பதவியை அடைந்தார் கேது.
கிரகணம்
சூரிய பகவான், சந்திர பகவான் இருவரும் ஸவர்பானுவை அமுதம் உண்ணும்போது ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்ததால், ராகு-கேது பகவான்களுக்கு நிரந்தர எதிரியானார்கள். சூரிய பகவான் ஒரு வருடத்தில் ராகு, கேது பகவான்களை ஒரு முறை சந்திப்பார். எனவே ராகுவைக் கடக்கும்போது ஒரு சூரிய கிரகணத்தையும், அதே மாதத்தில் ஒரு சந்திர கிரகணத்தையும் ஏற்படுத்துவார். ஆக மொத்தத்தில் ஒரு வருடத்தில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும், ஏற்படும். கிரகணக் காலத்தில் சூரியன், சந்திரன் நின்ற ராசிக்கு 1, 5, 9ம் ராசியை லக்னமாகக் கொண்டவர்களுக்கும், சூரியன், சந்திரன் நின்ற நட்சத்திரத்தை (ஜன்ம), அடுத்து வரும் 9வது (அனு ஜன்ம), 18வது (த்ரி ஜன்ம) நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். அத்தகையோர், இக்காலங்களில் நெற்றியில் எழுதி கட்டிக் கொள்ளும் ஸ்லோகத்தை கீழே கொடுத்துள்ளோம் : சந்திர கிரகண பட்டம்
யோ ùஸள வஜ் ர தர: தேவ: ஆதித்யா நாம் ப்ரபுர்மத: ஸஹஸ்நர நயந: சந்திர கிரஹ பீடாம் வ்யபோஹது:
இதில் சூரிய கிரகணத்தின்போது “சூரிய கிரஹ பீடாம்’ என்று மாற்றிக் கொள்ளவும்.
சாயாக் கிரகங்கள் என்பதால் ராகு-கேது பகவான்களுக்கும், தினக் கோளான சந்திர பகவானுக்கும், தாய்க் கிரகம் என்பதால் சூரிய பகவானுக்கும் வக்கிர கதி கிடையாது. மற்ற ஐந்து கிரகங்களுக்கும் சூரிய பகவானின் ஆகர்ஷண சக்திக்கு ஏற்ப வக்கிர கதி உண்டாகிறது. ராசி இல்லங்களில் ராகு-கேது பகவான்களுக்கு என்று தனி இல்லங்கள் கிடையாது. அவர்கள் எந்தக் கிரகத்தினுடைய இல்லங்களில் அமர்கிறார்களோ அக்கிரகங்களுக்கு உண்டான காரகங்களையும், நன்மை-தீமை போன்ற பலா பலன்களையும் அளிக்கிறார்கள். ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்து அதில் ராகு இருந்தால், எல்லாக் கிரகங்களுடைய பலன்களையும் தனதாக்கிக் கொண்டு ஏனைய கிரகங்கள் அந்த ஜாதகருக்கு வழங்கக்கூடிய நன்மை (அல்லது) தீமைப் பலன்களை தாமே வழங்குவார். இப்படிப்பட்ட ராகுவைவிட கேது அதிகப் பலமுடையவராகக் கருதப்படுகிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் ராகுவோ (அல்லது) கேதுவோ லக்னத்திலிருந்து 3, 6, 11ம் இல்லங்களில் இடம் பெற்றால், அக்கிரகங்களின் தசா புக்தி காலங்களில் நன்மையான யோக பலன்கள் நடக்கும். “கருநாகம்’ என்று சொல்லப்படுபவர் ராகு. இவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் எங்காவது தனித்து நின்று, அந்த ராகுவினுடைய இல்லத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் பிற கிரகங்கள் இடம் பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு என்றாவது ஒரு நாள் திடீர் தனயோகம் ஏற்படும். ராகு-கேது பகவான்களின் தசா புக்திகளில் முதல் பாதியைவிட பின் பாதி நன்மையாக இருக்கும். ராகு சனியைப் போலவும் (சனிவத் ராகு), கேது அங்காரகனைப் போலவும் (குஜவத் கேது) பலன் தரும் என்பர். இது தவிர ராகு-கேது தாம் நின்ற ஸ்தான அதிபர்களின் பலன்களையும் தருவார்கள் என்பது ஜோதிட விதி. “ராகு கொடுத்துக் கெடுப்பார், கேது கெடுத்துக் கொடுப்பார்’ என்பதும் ஜோதிடப் பழமொழியாகும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் உட்பட அனைத்துக் கிரகங்களும் ராகு-கேது பிடிக்குள் அடங்கியிருந்தால் அவருக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகும். மேற்படி தோஷமுடையவர்கள் 32 வயதுக்கு மேல்தான் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றமடைவார்கள். ராகு-கேது பகவான்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் ஆகியவை பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றன. பல குடும்பங்களில் குடும்பத்தினர் அனைவருக்குமோ (அல்லது) பெரும்பான்மையினருக்கோ அனைத்துக் கிரகங்களும் ராகு-கேது பிடிக்குள்ளோ, லக்னம், குடும்பம், சுகம், பஞ்சமம் ஆகிய ஸ்தானங்களிலோ, அல்லது கிரகங்கள் ராகு-கேது பகவான்களின் சாரம் பெற்று சுபக்கிரகச் சேர்க்கை அல்லது பார்வை பெறாமல் போவதோ பெரும்பான்மையாக அமைகிறது. இத்தகைய குடும்பத்தினருக்கு திருமணத் தாமதம், தடை, புத்திர பாக்யம் தாமதம், தடை ஆகியவை பரவலாக அமைகின்றது. இத்தகைய குடும்பத்தினர் சர்ப்ப சாந்தி, நாகப் பிரதிஷ்டை ஆகியவைகளைச் செய்து குறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் சர்ப்பத்துக்கு முற்பிறவியில் செய்த துன்பங்களின் காரணமாக அமைகிறது என்று கூறலாம்.
குரு பகவான்
குரு பகவான் நவக்கிரகங்களில் முக்கியமானவர். ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் தங்கி, 12 ராசிகளையும் கடக்க 12 வருடங்கள் எடுத்துக் கொள்வார். நவக்கிரக மண்டலத்தில் ஐந்தாவதாக வருகிறார். சூரிய பகவானுக்கு வடக்கில் இருக்கிறார். இவருக்கு ஒரு முகம், நான்கு கைகள். குரு பகவான் ஒரு பரிபூரண சுபர் ஆவார். நவக்கிரகங்களில் “பொன்னவன்’ என்று போற்றப்படும் குரு பகவான், ஜாதகத்தில் உள்ள தோஷங்களைத் தன் பார்வை மற்றும் சேர்க்கையால் நிவர்த்தி செய்கிறார். இவர் இருக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்கள் சுபிட்சமடையும். இதனால்தான் குரு பகவானின் பார்வையை, “”குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி” என்கிறோம். பிரம்மதேவரின் மானஸ புத்திரர்களில் ஒருவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான ஆங்கீரஸ முனிவருக்கும், விசுதா தேவிக்கும் 7வது புத்திரனாகப் பிறந்தவர் குரு பகவான். அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தவர். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குருவானவர். தங்கத்தை ஆபரணமாகக் கொண்டவர். அனைத்துப் புத்தி தத்துவங்களுக்கும் காரணகர்த்தா இவரே. சட்டம், மருத்துவம், பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெற வைப்பவர். நம் அறியாமை என்கிற இருட்டை விரட்டி, அறிவு ஒளியை ஏற்றுபவர். அறிவைப் புகட்டி, வறுமையை ஓடச் செய்து தன் காரகத்துவமான தனத் தைக் கொடுப்பவர். ஆலயங்களில் தென் திசை நோக்கி, தென்முகக் கடவுளாகக் காட்சி தருபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆவார். சிவபெருமானின் குரு வடிவமே தட்சிணாமூர்த்தியாகும். தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் அமர்ந்து சநகர், சநந்தனர், சநாதனர் மற்றும் சனற்குமாரர் முதலியோருக்கு மௌன நிலையிலிருந்து ஐயங்களை நீக்கி, ஞானத்தை அருள்கிறார். இதில் குருவாகிய தட்சிணாமூர்த்தி யௌவனம் (இளமை) உள்ளவராக இருப்பார், பாடம் கற்கும் ரிஷிகள் முதியவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குரு பகவானின் அதிதேவதையாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி திகழ்வதால் குரு பகவானையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வர, கல்வி-கேள்வி ஞானம் உண்டாகும். திரண்ட செல்வமும் கிடைக்கும். குரு பகவானின் அனுக்கிரகத்தாலேயே மாந்தர்களுக்கு திருமணம், புத்திரம், பேரன், பேத்தி பிறத்தல், இளமையில் நற்கல்வி, நல்ல உத்தியோகம், வயோதிகத்தில் அமைதியான வாழ்வு ஆகியவை கிடைக்கின்றன. பலமான குரு பகவான் பெண் குழந்தைகளை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து, அவர்களால் குடும்ப கௌரவத்தை உயர்த்துவார். குருபகவான் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து ஸ்தானங்களில் சஞ்சரித்தால், சிறப்புகளைக் கூடுதலாக வழங்குவார். மற்ற ராசிகளில் சஞ்சரிக்க, பார்வை பலத்தால் மட்டுமே நலன்களைச் செய்யக் கூடியவராகிறார். இவர் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னக்காரர்களுக்கு கேந்திர ஸ்தானங்களில் தனித்து இருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தை அடைந்து, அந்தப் பாவங்களால் உண்டாகும் நன்மைகளைக் குறைத்துவிடுகிறார். மேலும் சுக்கிர பகவானைப் போலவே குரு பகவானும் களத்ர ஸ்தானமான ஏழாம் வீட்டில் தனித்து இருக்கும்போது, மணவாழ்க்கையில் சுகத்தைக் கொடுப்பதில்லை. அதற்குப் பரிகாரமாக குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, இருவருக்கும் கருப்புக் கொண்டைக் கடலை மாலை சாற்றி, மஞ்சள் பூக்களால் அர்ச்சித்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வர, சம தோஷமுள்ள சம்பந்தத்தை உண்டாக்கித் தருவார். மேலும் குரு ஸ்தலமாகக் கருதப்படும் திருச்செந்தூர் செந்திலாண்டவனை வணங்கி வர, குரு பகவானால் உண்டாகும் தோஷங்கள் பறந்தோடிவிடும். ஏனெனில் குரு பகவான் திருச்செந்தூரில் உறையும் செந்திலாண்டவரை வணங்கி நலம் பெற்றார் என்பது உண்மை.
ராகு பகவான் ஸ்தோத்திரம்
அர்த்த காயம் மஹா வீர்யம் சந்திராதித்ய விமர்த்தனம்,
ஸிம்ஹி கா கர்ப்ப கலம் பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
கேது பகவான் ஸ்தோத்திரம்
பலா ச புஷ்ப ஸங்காசம் தார காக்ரஹ மஸ்தகம்.
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
குரு பகவானால் கிடைக்கும் யோகங்கள்
குரு பகவானுக்குக் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ல் செவ்வாய் பகவான் இருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகும். இதனால் ஜாதகருக்கு பூமி, உணவகம், போலீஸ், ராணுவம் ஆகிய துறைகளில் வெற்றி உண்டாகும். குரு பகவானுடன் சூரிய பகவான் இணைந்தோ, அல்லது அவரைப் பார்த்தோ இருந்தால் சிவராஜ யோகம் உண்டாகிறது. இவர்களுக்கு அரசியலில் வெற்றி, நிர்வாகத் திறமை, முதன்மைப் பதவி ஆகியவை கிடைக்கும்.
குரு பகவானுக்கு திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 ஆகிய இடங்களில் சந்திர பகவான் இருந்தால், குரு சந்திரயோகம் உண்டாகும். இந்த யோகத்தினால் ஜாதகர் ஒரு துறையில் சில காலம் இருந்து, பின்னர் படிப்புக்குச் சம்பந்தமில்லாத துறையில் பிற்காலத்தில் ஈடுபட்டு பெரிய வெற்றிகளைக் காண்பார்கள்.
கஜகேசரி யோகம் :
குரு பகவானுக்கு 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சந்திர பகவான் இருப்பதால் இந்த யோகம் ஏற்படும். இந்த யோகத்தைக் கொண்டவர்கள் தங்களது ஜாதகத்தில் உள்ள மற்ற குறைகள் நீங்கப் பெற்று, எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
ஹம்ஸ யோகம் :
குரு பகவான் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ல் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று இருப்பதால் உண்டாவது. இது பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்று. இதனால் எவருக்கும் தலை வணங்காத தலைமைப் பதவி கிடைக்கும். செல்வம், செல்வாக்குடன் நீண்ட ஆயுள் உண்டாகும். குரு பகவானும், சனி பகவானும் ஒருவர் ஜாதகத்தில் இணைந்திருந்தாலோ அல்லது சம சப்தமப் பார்வை செய்தாலோ ஜாதகர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். தொழில் மற்றும் உத்யோகத்தில் எல்லாவித சுகங்களையும் அவர் அனுபவிப்பார். ஜாதகர் கேட்காமலேயே பல வித உதவிகள் கிடைக்கும்; ஜாதகருக்கு உதவி செய்யப் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். ஜாதகருக்குச் சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஜாதகரின் வாக்குக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
—————-
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
மேஷம்
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1-ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு - கேது பகவான்கள் உங்களின் தொழில் சுக ஸ்தான ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து முறையே தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆனார்கள். குருபகவான் இந்த ஆண்டு, மார்கழி மாதம், 4ஆம் தேதி (19-12-2009), சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு (விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை) மகர ராசியிலிருந்து தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இந்தக் காலகட்டத்தில் உங்களின் இளைய சகோதர, சகோதரிகளுக்கு நன்மைகள் உண்டாகும். அவர்களால் எதிர்பார்த்த உதவிகளையும் பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கோதண்ட ராகுவாக அமர்ந்திருப்பதால் தந்தை, தந்தை வழிப்பாட்டன் ஆகியோருடன் உள்ள உறவில் சிறு தொய்வுகள் ஏற்படும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இருந்த போதிலும் அவர்களுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடும். அவர்களை நீங்கள் அனுசரித்துச் செல்வது அவசியமாகும்.
மற்றபடி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்கள், அது கிடைத்து வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள். விரோதமாக நடந்து கொண்டிருந்த நண்பர்களிடம் இணக்கம் உருவாகும். புதிய முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் செய்தொழிலில் நஷ்டங்கள் மாறி, லாபம் கொட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் வெளியூர், வெளிநாட்டில் சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்கள் தேடி வந்து உதவிகளைச் செய்வார்கள். வழக்குகளில் சிக்கி வருவாய் வராமல் இருந்த சொத்துக்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நிரந்தர வருவாய் வரத் தொடங்கும். சுயமதிப்பை விட்டுக் கொடுக்காத வாழ்க்கை அமையும். நற்பெயர் உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நீங்கள் விருப்பப்பட்ட பொறுப்பு, உங்கள் கைக்கு வந்து சேரும். வருமானம் நன்றாகவே இருக்கும். அதேசமயம் ஆரம்பத்தில் மேலதிகாரிகள் சிறிது கெடுபிடியாக நடந்துகொண்டு, உங்களை சஞ்சலத்தில் ஆழ்த்துவர். ஆனாலும் அவற்றை நீங்கள் தைரியத்துடன் சமாளிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு அலுவலகத்தின் அனுமதியுடன் கடன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
வியா பாரிகளுக்கு எல்லாத் தடைகளும் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் பெருகும். புதிய தொழில் நுட்பங்களைக் கற்பீர்கள். அவற்றை வியாபாரத்தில் புகுத்தி நன்மையடைவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்து, தக்க முடிவுகளை எடுப்பீர்கள். கடன்கள் குறையும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்குத் தடை இராது. மறைமுகப் போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரிகள் வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
விவ சாயிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் மகசூல் நன்றாக இருக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளுக்குத் தக்கவாறு விலைகளை நிர்ணயித்து விற்பனை செய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். கால்நடைகள் மூலமாகவும் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். குறிப்பாகப் பால் வியாபாரம் செய்பவர்கள், எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். சக விவசாயிகள் உங்களை மெச்சத்தக்க வகையில் பணியாற்றுவீர்கள். சிறிய முதலீட்டில் நிலங்களை வாங்கலாம். அதே சமயம், வயல் வரப்புச் சண்டைகளில் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள்.
இந்த ராசி அரசியல்வாதிகள் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். நேரிடையாக மனம் விட்டுப் பேசி, மனஸ்தாபத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். மற்றபடி எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். இதன் மூலம் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்; முக்கியப் பொறுப்புகளும் கிடைக்கும். அதேநேரம் கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று, அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் ஆணவம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் புகழும், பாராட்டும் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களைச் செய்து, உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களும் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். நன்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். துறையில் உங்களின் முக்கிய இலக்கை எட்டுவீர்கள். தொழிலில் நன்றாகச் செயல்பட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அதேசமயம் இந்தக் காலகட்டத்தில் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடைய முடியும்.
பெண்மணிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களை அரவணைத்துச் சென்று, உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள். கணவர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பண வரவும் சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அதை இக்காலகட்டத்தில் செய்யலாம்.
மாண வமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி அடைவீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பெற்றோர்கள் முன் வருவார்கள். ஆசிரியர்களும் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து, எச்சரிக்கையுடன் பழகுங்கள்.
பரிகாரம்: விநாயகரை முடிந்த போதெல்லாம் அருகம்புல் மாலை சாற்றி வழிபட, நலன்கள் கூடும்.
—————————————————————————————————————————————-
ரிஷபம்
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1ஆம் தேதி (17.11.09) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு, கேது பகவான்கள் உங்களின் பாக்ய ஸ்தான ராசிகளான மகரம், கடக ராசிகளிலிருந்து முறையே உங்களின் அஷ்டம, குடும்ப ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்க அடிப்படையில் பெயர்ச்சி ஆனார்கள். அதேபோல் குரு பகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம், 4ஆம் தேதி (19.12.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு, உங்களின் பாக்ய ஸ்தானமான மகர ராசியிலிருந்து தொழில் ஸ்தானமான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இக்காலக்கட் டத்தில் நெடுநாட்களாக உங்களை வாட்டிக் கொண்டிருந்த உடல் உபாதையிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். மேலும் விஷக்கடி ஒவ்வாமையினால் ஏற்பட்ட அரிப்பு போன்றவை தீரும். தீயோர் சேர்க்கையையும் தவிர்த்துவிடுவீர்கள். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளையும் இனம் கண்டு விலக்கிவிடுவீர்கள். அதேநேரம் எதிர்பாராத ஒரு சூழ்நிலையையும் சந்திக்க வேண்டிவரும். இதனால் மனதிற்கு சிறு சங்கடங்கள் உண்டாகும்.
மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். காலத்தை நிர்ணயித்து உழைப்பீர்கள்; இலக்குகளை எட்டுவீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நல்லோரின் சேர்க்கை உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமாகையால், செய்தொழிலில் மேன்மை உண்டாகும். உங்கள் பெயரும், புகழும் ஓங்கும். புதிய தொழில்கள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் புது நுட்பங்களைப் புகுத்துவீர்கள். வருமானம் சீராகவே காணப்படும். அதிகாரம் செய்யும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசு அதிகாரிகள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். சுய மதிப்பையும், சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்காமல் பணியாற்றுவீர்கள். சிலர் புதிய அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவார்கள். பங்கு சந்தைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் லாபம் வந்து சேரும். அதேநேரம் ஒரே இடத்தில் பணியாற்றாமல் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறிது ஆயாசம் உண்டாகும். எனவே சரியான ஓய்வு, உறக்கங்களைத் தவிர்க்கக் கூடாது.
உத்தி யோகஸ்தர்கள் அலுவலகக் காரியங்களில் வெற்றி வாகை சூடுவார்கள். வேலையில் இருந்த சுமைகள் குறையும். சக ஊழியர்கள் உங்களிடம் சகஜமாகப் பழகுவார்கள். இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, உங்கள் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க முற்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் விலகும். உங்கள் தன்னம்பிக்கை பலப்படும். அதேநேரம் எவரிடமும், குறிப்பாக மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மற்றபடி, அலுவலக ரீதியாக அடிக்கடி பயணங்களைச் செய்ய நேரிடும். சம்பள உயர்வு எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே கிடைக்கும்.
இந்த ராசி வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புது முதலீடுகளால் கடையை நவீனப்படுத்துவீர்கள். அதேநேரம் அறிமுகம் இல்லாதவர்களுக்குக் கடன் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டாம்; இதனால் சிக்கல்கள் ஏற்படும். மேலும் கூட்டாளிகளிடமும் வரவு-செலவு கணக்குகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளவும். வாகனங்களுக்குப் பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும். அதேசமயம் பணப் புழக்கத்திற்கு எக்காலத்திலும் குறைவு வராது.
விவசாயி களுக்கு விவசாயம் சிறப்பாக நடைபெறும். விளைச்சலில் எதிர்பார்த்த மகசூல் காண்பீர்கள். புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். சக விவசாயிகளுடன் போட்டி-பொறாமைகள் இருந்தாலும் உங்களின் முயற்சிகள் தடைகளைச் சந்திக்காது. புதிய குத்தகை வாய்ப்புகளும் வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். கடன் வாங்கும் நிலை உண்டாகாது. கால்நடைகளாலும் பலன் அடைவீர்கள். அரசு மானியங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்குச் சங்கடங்கள் குறையும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். தெளிந்த மனதுடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். சாதகமான திருப்பங்கள் உண்டாகும். பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். அச்சத்துடன் இருந்த நிலைமை மாறி, சிறப்பாகப் பேசுவீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளில் சுமுகமான தீர்ப்பு கிடைக்கும். அதேநேரம் உட்கட்சி விஷயங்களில் அதிகம் தலையிட வேண்டாம். எவரின் நிர்ப்பந்தத்துக்கும் அடிபணியாமல் உங்களின் கொள்கையில் பிடிப்பாக இருக்கவும்.
கலைத்துறையினருக்கு வேலையில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் உங்களின் தனி முத்திரையைப் பதிப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சக கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால், எதிர்காலப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
பெண் மணிகள் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். கணவருடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அதேநேரம் பேச்சில் நிதானமும், பொறுப்பும் தேவை.
மாணவமணிகள் கவனத்துடன் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம். பலமுறை படித்து மனப்பாடம் செய்து, நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்யவும். விளையாட்டுகளிலும் முன்னேறக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். மற்றபடி பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு, உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.
பரிகாரம் : துர்கையம்மனை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டு வரவும்.
———————————————————————————-
மிதுனம்
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1ஆம் தேதி, (17.11.2009) செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு/கேது பகவான்கள் உங்கள் அஷ்டம குடும்ப ஸ்தான ராசிகளான மகர, கடக ராசியிலிருந்து முறையே உங்கள் களத்ர, ஜன்ம ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணித அடிப்படையில் பெயர்ச்சி ஆனார்கள். குரு பகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம், நான்காம் தேதி (19-12-2009), சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு, உங்கள் அஷ்டம ஸ்தான ராசியான மகர ராசியிலிருந்து பாக்ய ஸ்தானமான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இந்தக் காலகட்டத்தில் கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருந்து கொடுக்கல், வாங்கலில் ஈடுபட வேண்டி வரும். மற்றபடி நண்பர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளைச் செய்வீர்கள். உங்கள் கீழ் வேலை செய்பவர்களுக்கு அனுசரணையாக இருப்பீர்கள். இதனால் வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தாய் வழி மூதாதையரின் சொத்துக்களில் பாகப் பிரிவினைகள் உண்டாகி, வருமானம் வரத் தொடங்கும். உங்கள் பேச்சினால் நண்பர்களைக் கவருவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்த முயற்சி செய்வீர்கள். அதேசமயம் கணவனும், மனைவியும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால், சுமுக நிலையைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மேலும் அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் நீங்கள் ஆளாக நேரிடலாம்.
ராசியில் அமர்ந்துள்ள கேது பகவான் குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால், உங்களின் இரக்க குணம் அதிகரிக்கும். தயாள உள்ளத்துடன் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்திற்கு எந்தத் தடையும் உண்டாகாது. நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படும். அனைவரிடமும் பயமில்லாமல் பேசி, உங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். ஆன்மீக விஷயங்களில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். கோயில் திருப்பணி சம்பந்தமாகப் பிறருக்கு ஆலோசனைகளையும் வழங்குவீர்கள்.
இந்தக் காலத்தில் குரு பகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் பலமாக அமர்ந்திருப்பதால் உங்கள் வேலைகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய பணமும் வந்து சேரும். செல்வத்துடன் செல்வாக்கும் உயரும். புதிய கலைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். விரோதம் பாராட்டுபவர்களையும், நயமுடன் பேசி அரவணைத்துச் செல்வீர்கள். உங்கள் சொல்லுக்கு குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். குழந்தை இல்லாதோருக்கு மழலைச் செல்வமும், வயதானோருக்கு பேரக் குழந்தைகள் பிறக்கும் பாக்கியமும் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் ஆசிகளைப் பெற்று, செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். அனாவசியப் பண விரயம் எதுவும் இந்தக் காலத்தில் ஏற்படாது.
உத்யோ கஸ்தர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலை நிலவும். மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். வேலையில் இருந்த சிறு தடுமாற்றங்கள் நீங்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் அலுவலக வேலைக்காக வெளியூரில் பணியாற்ற வேண்டி வரும். சக ஊழியர்களிடம் நேரிடையாக, நேர்மையாகப் பழகி வரவும். இல்லையேல் உங்கள் மீது வீண் பழி சுமத்தப்படலாம். மேலும் புது முயற்சிகளில் நன்றாக யோசித்து இறங்கவும்.
வியாபாரிகள் முன்னேற்றகரமான நிலையைக் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, எதிர்பார்த்த வளர்ச்சி தென்படும். வருமானம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளைத் திறம்பட நிறைவேற்றுவீர்கள். கடன் வாங்கினாலும் அவற்றை வியாபாரத்தைப் பெருக்கவே பயன்படுத்துவீர்கள். வெளியூரிலும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நெடுநாட்களாக தள்ளிப்போட்டிருந்த ஒரு முக்கிமான காரியம் நிறைவேறும். அதேசமயம் அனைத்து விஷயங்களிலும் கூட்டாளிகளுடன் சேர்ந்து இறங்கவும். இல்லையேல் வீண் மனக்கசப்புகளைச் சந்திக்க நேரிடும்.
இந்த ராசி விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முயற்சி செய்வீர்கள். வானம் பார்த்த பூமியை வைத்திருப்பவர்கள் தேவையான மழை பெய்ததால் உன்னதமான விளைச்சலைக் காண்பீர்கள். விவசாயத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பழைய குத்தகைப் பாக்கிகளும் வசூலாகும். அதேநேரம் பூச்சிகளால் பயிர்களுக்குச் சேதம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
அர சியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுத்தொண்டில் சிறு சிக்கல்களும், தடங்கல்களும் உருவான போதிலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். போட்டி, பொறாமைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். அதேசமயம் கட்சி மேலிடத்தின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவது அவசியம். மேலும் மனதில் தீய எண்ணங்களுக்கு இடம் தர வேண்டாம். குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மற்றபடி எதிர்க்கட்சியினர் உங்களிடம் மோத மாட்டார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். தொண்டர்களை அரவணைத்துச் சென்றால், மேலும் நன்மை அடையலாம்.
கலைத்துறையினருக்கு எதிர்பாராத வருவாய் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இடைவிடாமல் உழைத்து சாகசங்களைச் செய்வீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும். பணவரவு சரளமாக இருப்பதால், ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அதேநேரம் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.
பெண்மணிக ளுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் உற்சாகம் அடைவீர்கள். மற்றவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். பணவரவு நன்றாக இருப்பதால் ஆடை, அணிமணிகளை வாங்குவீர்கள். அதேநேரம் உங்கள் உடைமைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவமணிகளுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்து வரவும். குறிப்பாக சனிப் பிரதோஷம் நலம் தரும். முடிந்த அளவுக்கு “நமசிவாய’ என்று ஜபித்து வரவும்.
—————————————————–
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
கடகம்
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1-ம் தேதி (17.11.09), செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு/ கேது பகவான்கள் உங்கள் களத்ர, ஜன்ம ராசிகளிலிருந்து உங்கள் சஷ்டம (ஆறாவது), விரய (பன்னிரண்டாம்) ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆனார்கள். குருபகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.12.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு உங்களின் களத்ர ராசியான மகர ராசியிலிருந்து அஷ்டம (எட்டாம்) ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
ஆறாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் பெயரையும், புகழையும் உயர வைப்பார். வெளி வட்டாரத்தில் பீடு நடை போடுவீர்கள். நீங்கள் அதிரடியாகச் செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். வியாபார ரீதியாக புதிய முதலீடுகளைச் செய்து, தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி செய்வீர்கள். பொதுத் தொண்டினால் உங்களின் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக உங்களை வாட்டிக் கொண்டிருந்த உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். அதேநேரம் உங்களின் எண்ணங்களை வெளிப்படையாகக் கூற மாட்டீர்கள். இதனால் உங்களைச் சேர்ந்தவர்கள் உங்களின் மன ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுவார்கள்.
விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் குரு பகவானின் அருட் பார்வையைப் பெறுவதால், அனாவசியச் செலவுகள் உண்டாகாமல் காப்பாற்றப்படுவீர்கள். மனம் பக்தி மார்க்கத்தில் செல்லும். சிலருக்கு மந்திரங்களை தீட்சை பெறும் பாக்கியமும் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளி நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் மீது மற்றவர்களால் திணிக்கப்பட்ட பழிகள் விலகும்.
இந்தக் காலகட்டத்தில் குரு பகவானின் அஷ்டம ராசி சஞ்சாரத்தினால் உங்களின் ஆத்ம சக்தி பலப்படும். அதனால் ப்ராணாயாமம், மனோவசியக் கலைகளான கவனக்குவிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெறுவீர்கள். மனக் குழப்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கையிருப்புப் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும்.
நெருங்கிய உறவினர்கள் தக்க சமயத்தில் கேட்காமலேயே உதவிகளைச் செய்வார்கள். அகட விகடமாகப் பேசி, உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். உங்களுக்கென புதிய பாதையை வகுத்துக் கொள்ளுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். உங்கள் நண்பர்களுக்காக எதையும் செய்வீர்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். அதேநேரம் கெட்ட நீர் உடலில் சேர்ந்து, அதனால் உடலில் நீர்க்கொப்பளங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே குளிர்ச்சியான பதார்த்தங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதியாக வேலை செய்வீர்கள். உங்கள் மீது கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். இதனால் தாமதமாகியிருந்த உயர் பதவிகளும், ஊதிய உயர்வுகளும் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்குக் கடன் உதவிகள் கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் மெதுவாகப் பரிசீலிக்கப்பட்டாலும் சாதகமாக நிறைவேறும். அதேநேரம் உங்கள் வேலைகள் அனைத்தையும் கவனம் சிதறாமல் பட்டியலிட்டு, செய்து முடிக்கவும். உழைப்பதற்கு அஞ்சக்கூடாது.
இந்த ராசி வியாபாரிகளுக்கு இதுவரை இருந்த மந்த நிலை மாறி, கொடுக்கல்-வாங்கல் கைகொடுக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைந்து, பொருளாதார நிலை உயரும். இதனால் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உங்கள் பொருட்களை பல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்வீர்கள். பழைய வழக்குகளில் முடிவைக் காண்பீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அதேநேரம் வரவு-செலவு விஷயங்களில் அக்கறை காட்டவும்.
விவசாயிகள், விளைச்சல் அதிகரித்து மகிழ்ச்சியைக் காண்பீர்கள். புதிய பயிர்களைப் பயிரிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். இதனால் குடும்பச் செலவுகளை ஈடுசெய்வீர்கள். கால்நடைகளாளும் சில நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகள் தானாக வந்து சேரும். பழைய குத்தகைகளும் திரும்பக் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொண்டர்களும் தங்களின் ஆதரவை முழுமையாக வழங்குவார்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேலிடத்தைக் கவருவீர்கள். இதனால் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக சந்தோஷம் தரும் பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
கலைத்துறையினரைப் பொறுத்தவரை, இதுவரை இருந்து வந்த பின் தங்கிய நிலையிலிருந்து விடுபடுவீர்கள். வாய்ப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரும். பண வரவும் அதிகரிக்கும்.
அதேநேரம் முழு முயற்சியோடு நீங்கள் திறமைகளை வெளிப்படுத்தினால்தான், துறையில் நல்ல லாபம் கிடைக்கும்; நழுவிச் சென்ற வாய்ப்புகளையும் திரும்பப் பெற முடியும்.
பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். அதேநேரம் முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வருவாய் சீராக இருக்குமெனினும் எதிர்கால அவசரத் தேவைகளை ஈடு கட்ட, சிக்கனத்தோடு இருப்பது அவசியம்.
மாணவம ணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். மனதைக் கட்டுப்படுத்தும் கலைகளான ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் கவனக் குவிப்பு அதிகரிக்கும். அதனால் கடினமான பாடங்களையும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பைரவரையும் வழிபட்டு வர, நலன் உண்டாகும்.
**********************
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
சிம்மம்
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1ஆம் தேதி (17.11.2009), செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு, கேது பகவான்கள் உங்கள் சஷ்டம (ஆறாம்), விரய (பன்னிரண்டாம்) ராசிகளிலிருந்து பூர்வபுண்ணிய லாப ஸ்தான ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆனார்கள். குருபகவான் உங்களின் சஷ்டம (ஆறாம்) ராசியான மகரத்திலிருந்து, களத்ர ராசியான கும்ப ராசிக்கு இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19-12-2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான், உங்களின் சிந்தனையில் இருந்த குழப்பங்களை விலக்குவார். மனம் ஒரு நிலைப்படும். முன் யோசனையுடன் செயல்களைச் செய்வீர்கள். வறுமையிலிருந்து விடுபடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அவசரப்படாமல் விவேகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளிலும் வருமானம் கொட்டும். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான், குரு பகவானின் கனிந்த பார்வையைப் பெறுகிறார். எனவே மனதிலிருந்த சஞ்சலங்கள் விலகும். உங்களின் அகங்காரம் அகன்று, அனைவரிடமும் பணிந்து செல்லும் சுபாவம் ஏற்படும். இதனால் எளிமையாக, அலட்டல் இல்லாமல் காரியமாற்றுவீர்கள்.
உங்களை ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாறுவார்கள். உங்களின் புத்திக்கூர்மை பளிச்சிடும். தெய்வ காரியங்களில் மனதைச் செலுத்துவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை முன்கூட்டியே புரிந்துகொள்வீர்கள். உங்கள் நண்பர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். ஏழை, எளியவர்களுக்குத் தானம் செய்வீர்கள். உங்கள் ஞாபக சக்தி கூடும்.
இக்கால கட்டத்தில் குரு பகவான் உங்களின் களத்ர ஸ்தான ராசியான ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். உங்களின் அறிவுரையை அனைவரும் கேட்கும் சூழ்நிலை உண்டாகும். ஆற்றலுடன் சாதனைகளைச் செய்து, வருமானத்தைப் பெருக்குவீர்கள். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய கல்வி கற்பதற்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். அதேநேரம் அவசரக் காரியங்களால் சில குறைகள் உண்டாகும். உங்கள் சக்திக்கு மீறிய ஆசைகள் ஏற்படும். அதனால் ஆடம்பரமாக வாழ நினைக்காமல், அமைதியாக இருக்கவும். மேலும் அனாவசியப் பிடிவாதங்களையும் விட்டுவிடவும்.
உத்யோகஸ்தர்கள் தங்கள் வேலையில் மனம் ஈடுபடாமல் இருந்த சூழ்நிலை மாறி, கருத்தூன்றிச் செயல்படத் தொடங்குவார்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை மறந்துவிட்டு, அலுவலகக் காரியங்களைச் செய்யுங்கள். மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். ஒரு முறைக்கு இரு முறை உங்கள் கோரிக்கைகளை வைத்தால் அவை நிறைவேறிவிடும். நிச்சயம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகாது. மேலும் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டாகும். அதேநேரம் அலுவலகத்தில் பிரத்யேக சலுகைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
வியாபா ரிகள் அதிகமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் தலையீடுகள் அவ்வப்போது இருந்தாலும் உங்கள் காரியங்களை மிகவும் சாதுர்யமாக முடித்துவிடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலிலும் லாபத்தைக் காண்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். இதனால் உங்கள் செல்வாக்கு உயரும். வங்கிகளிடமிருந்தும் கடன்கள் கிடைக்கும். உற்சாகமாகப் பணியாற்றும் சூழ்நிலை ஏற்படும்.
இந்த ராசி விவசாயிகளுக்கு இக்காலத்தில் கொள்முதல் லாபம் அதிகரிக்கும். விவசாயத்தை விரிவுபடுத்த சீரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயப் பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். கையிலுள்ள பொருட்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும். நீர்வரத்து நன்றாக இருப்பதால் ஊடுபயிர்களைப் பயிரிட்டு, மேலும் லாபம் அடைவீர்கள். மனது திருப்திகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும், மரியாதையும் உண்டாகும். உங்களின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இதனால் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் தீட்டும் ரகசியத் திட்டங்கள் வெற்றிபெறும். உயர்ந்தவர்களைச் சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புகழ் ஏணியில் ஏறத் துவங்குவீர்கள்.
கலைத்துறையினரைப் பொறுத்தவரை, உற்சாகமான சூழ்நிலை அமையும். புகழையும், பணத்தையும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். துறையில் போட்டி, பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.
பெண்மணிகளுக்கு அனைத்துச் சங்கடங்களும், சஞ்சலங்களும் தீரும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குழந்தைகளுக்காகவும், முதியவர்களுக்காகவும் சில செலவுகளைச் செய்வீர்கள். திருடு போனதாக நினைத்துக் கொண்டிருந்த பொருட்கள் கைக்குக் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மாணவமணிகளுக்குக் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பள்ளியில் நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களை எதிரிகளாக நினைத்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்யம் சிறக்க, தகுதியான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை “ராம் ராம்’ என்று ஜபித்துக்கொண்டே சுற்றி வரவும்.
———————————————————————
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
கன்னி
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1ஆம் தேதி (17.11.2009), செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு - கேது பகவான்கள் உங்கள் பூர்வபுண்ய (ஐந்தாம்), லாப (பதினொன்றாம்) ராசிகளிலிருந்து, சுக (நான்கு), தொழில் (பத்து) ஸ்தான ராசிகளுக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆனார்கள். குரு பகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம், 4ஆம் தேதி (19.12.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு உங்களின் பூர்வ புண்ணிய ராசியான மகர ராசியிலிருந்து சஷ்டம (ஆறாம்) ராசியான கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
சுக ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான், உங்கள் கல்வியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார். சிலருக்கு வெளியூர் சென்று, விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கலைகளில் ஆர்வம் ஏற்படும். அதேநேரம் புதியவர்களை நம்பி எதையும் செய்யக்கூடாது; அவர்களால் பண நஷ்டங்கள் ஏற்படலாம். மேலும் சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்த ú வண்டாம்.
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், குருபகவானின் பார்வையைப் பெறுவதால் தொழிலில் சிறப்பான வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் வசீகர சக்தி கூடும். கூட்டாளிகளிடம் சுமுகமான உறவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். அலைச்சல்கள் இருந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதைச் செம்மையாக முடித்து, நல்ல வருவாயைப் பெறுவீர்கள்.
இக்காலகட்டத்தில் குரு பகவான் சஷ்டம (ஆறாம்) ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் கடினமாக உழைக்க நேரிடும். மற்றபடி திறமையுடன் பணியாற்றுவீர்கள். உழைப்பிற்கேற்ற வருமானத்தைக் காண்பீர்கள். புதிய யுக்திகளைக் கற்க ஆர்வம் அதிகரிக்கும். சமுதாயத்தில் பெயரும், புகழும் கூடும். சிலருக்கு வீடு மாறும் யோகம் உண்டாகும். விரோதிகளால் எந்தத் தொந்தரவும் உண்டாகாது. தர்ம ஸ்தாபன விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு úக்ஷத்திராடனம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். அதேநேரம் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்பு உள்ளதால், ஆகார விஷயங்களில் கவனம் செலுத்தவும். மனதில் ஏற்படும் சஞ்சலங்களைக் குறைக்க யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யுங்கள். மேலும் தீயவர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.
உத்யோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்திலிருந்த கெடுபிடிகள் குறையும். தெரியாத வேலைகளை சக ஊழியர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் உதவியும் கிடைக்கும். மனதுக்கு விருப்பமான இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வேலைப்பளு கூடினாலும் திட்டமிட்டுச் செய்து முடித்து, நல்ல பெயர் வாங்குவீர்கள். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். அலுவலகத்தில் இழந்த பொறுப்புகளைத் திரும்பப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் நஷ்டங்களிலிருந்து மீண்டு வந்துவிடுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப, நன்கு விற்பனை நடக்கும். அதேசமயம் சரியாகத் திட்டம் தீட்டிய பிறகே எந்த வேலையையும் செய்யவும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். மற்றபடி எதிர்வரும் தடைகளை மன தைரியத்துடன் சமாளிப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் சுறுசுறுப்பு கூடும்.
இந்த ராசி விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டிவரும். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நெல், கோதுமை பயிர் செய்பவர்கள் சுமாரான பலன்களையே பெறுவார்கள். கருப்பு நிறப் பொருட்களை பயிர் செய்பவர்கள் அதிக மகசூலைப் பெற்று, லாபத்தை அள்ளுவார்கள். உங்களின் கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்வீர்கள். இதனால் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும்.
அரசியல்வாதி கள் சமுதாயப்பணி செய்து, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். இதனால் மனதில் திருப்தி உண்டாகும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பிரசாரத்தில் சலிப்படையாமல் ஈடுபடுவீர்கள். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகளைப் பெறுவீர்கள். வருமானத்துக்கும் எந்தத் தடையும் வராது.
கலைத் துறையினருக்கு சரளமான பண வசதிகள் கிடைக்கும். உங்களின் திறமையினால் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலருக்கு விருது பெறும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். அதேநேரம் வீணான செலவுகளைச் செய்ய வேண்டாம்.
பெண்மணிகளுக்கு இனம் புரியாத மனக் குழப்பம் இருக்óகும். எனினும் உங்கள் காரியங்களில் முழுதாக ஈடுபடுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். உற்றார், உறவினர்களுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ளுவீர்கள். இதனால் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கணவரின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும்.
மாணவ மணிகளைப் பொறுத்தவரை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டுகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். ஆத்ம ஒளி பெற, யோகா மற்றும் ப்ராணாயாமத்தில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் அனுகூலமான போக்கைக் கடைபிடித்து, அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பரிகாரம்: சனிபகவானை முடிந்தபொழுதெல்லாம் “சனி அஷ்டகம்’ படித்து வழிபட்டு வரவும்.
——————————————————————-
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
துலாம்
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு, கேது பகவான்கள் உங்கள் சுகம் (நான்கு), தொழில் (பத்து) ஸ்தான ராசிகளிலிருந்து தைரிய, பாக்ய ஸ்தான ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.12.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு குருபகவான் உங்கள் சுக (நான்கு) ஸ்தான ராசியிலிருந்து, பூர்வபுண்ய (ஐந்து) ஸ்தான ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், எடுத்த காரியங்களில் திறமையாகப் பணியாற்றும் வல்லமையைத் தருவார். பெரும் பணிகளை ஏற்று நிர்வாகத் திறமையுடன் செயல்படுத்தி புகழடைவீர்கள். உங்களின் கீழ் பணியாற்றுபவர்கள், உங்கள் சொல்படி நடப்பார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முன்பாகவே புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மீகப் பெரியவர்களுடன் சேர்ந்து, திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். சாஸ்திர ஆராய்ச்சிகளில் குறிப்பாக மறைமுக விஷயங்களில் ஈடுபட்டு நல்ல தேர்ச்சி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளுடன் இணக்கமான உறவை வைத்துக் கொள்வீர்கள். நண்பர்களின் மறைமுக நடவடிக்கைகளை சாதுர்யமாகச் சமாளித்து, அவர்கள் தங்கள் தவறுகளை உணர வைப்பீர்கள்.
கேது பகவான் பாக்ய ஸ்தான ராசியில் அமர்ந்து குரு பகவானின் பார்வையைப் பெறுவதால், உங்களின் தயாள குணம் பரிமளிக்கும். பல வழிகளில் பணம் திரட்டுவீர்கள். புதிய துறைகளிலும் ஈடுபடுவீர்கள். உங்கள் ஞாபக சக்தி கூடும். உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். அதேநேரம் உங்கள் கொள்கைகளில் நிரந்தரப் பிடிப்பு இராது. எந்தக் காரியத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து, நல்ல விஷயமாக இருந்தால் மட்டுமே ஈடுபடுவீர்கள்.
மேலும் தந்தை வழி உறவினர்களின் மறைவால் இல்லத்தில் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தக் காலகட்டத்தில் குரு பகவான் பூர்வபுண்ய (ஐந்தாம்) ஸ்தான ராசியில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து வந்த மனக் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். சிலர் வாகனம் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி உண்டாகும்.
இல் லத்தில் சுப காரியங்கள் நடக்கும். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து விருதுகளும், ரொக்கமும் கிடைக்கும். குடும்ப மேன்மை ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய சேமிப்புகளைச் செய்வீர்கள். குருபகவான் புத்தி ஸ்தானத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உங்களின் சூட்சும புத்தியும், விவேகமும் உங்கள் செயல்களில் வெளிப்படும்.
உத்யோகஸ்தர் களுக்கு எல்லா வேலைகளையும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உன்னதமான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராகச் சதி செய்தவர்கள் அடங்கிவிடுவர். வருமானம் பல மடங்கு உயரும். எனவே குடும்பத் தேவைகளை நீங்கள் சுலபமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உங்களுக்குக் கருணை காட்டுவார்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள, தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். வழக்குகள் சாதகமாகத் தீர்ந்துவிடும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். வங்கிக் கடன்கள் மூலம் வியாபாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வீர்கள்.
விவசாயிக ளுக்கு புது குத்தகைகள் கிடைக்கும். விளைச்சலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். புதிய கழனிகளை வாங்குவீர்கள். கரும்பு பயிர் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். வயல் வரப்புப் பிரச்சினைகளும் தீரும். அதேநேரம் பொருளாதார விஷயங்களில் விழிப்புடன் இருக்கவும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் கோரிக்கைகளை கட்சி மேலிடம் பரிசீலிக்கும். உங்களின் முயற்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பலன் தரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதைகள் உயரும். அதே சமயம் உட்கட்சிப் பூசலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மாற்றுக் கட்சியினரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
கலைத் துறையினர் உற்சாகமாகப் பணியாற்றுவார்கள். பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக் கொடுத்து, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். மேலும் கைநழுவிப் போன வாய்ப்புகளும் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் கவனமாக ஈடுபடவும்.
பெண்மணிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். ஆடை, அணிமணிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் பிரிந்து இருந்தவர்கள் சேர வாய்ப்பு உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அந்தப் பாக்கியத்தைப் பெறும் காலகட்டமிது.
மாண வமணிகள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள். விருப்பப் பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதேநேரம் அவசரப் படாமல் உங்கள் வேலைகளில் ஈடுபடவும். நண்பர்களுடன் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அவற்றால் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. எனினும் பேச்சில் நிதானம் தேவை.
பரிகாரம் : “கோளறு பதிகம்’ படித்து சிவபெருமானையும், விநாயகர் அகவல் படித்து விநாயகரையும் வழிபட்டு வர, முன்னேற்றங்கள் தேடி வரும்.
———————————————-
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
விருச்சிகம்
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்கள் தைரிய (மூன்று), பாக்கிய (ஒன்பது) ஸ்தான ராசிகளான மகரம் மற்றும் கடக ராசிகளிலிருந்து குடும்ப(இரண்டு), அஷ்டம (எட்டு) ஸ்தான ராசிகளுக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். குரு பகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு உங்கள் தைரிய (மூன்று) ஸ்தான ராசியிலிருந்து சுக (நான்கு) ஸ்தான ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் வருமானத்தில் இருந்த சிரமம் விலகும். திட்டமிடும் காரியங்கள் எளிதாக நிறைவேறும். அதேநேரம் உங்கள் செயல்களில் சிறிது சுயநலம் காணப்படும். அனாவசியப் பேச்சினால் சுலபமாக முடியக் கூடிய காரியம் தாமதப்படலாம். மற்றபடி, புதிய மொழிகளைக் கற்கும் வாய்ப்பு கிட்டும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப நலம் சீராகும். உங்களின் கீழ் பணியாற்றுபவர்கள் நாணயமாக நடந்து கொள்வார்கள். அஷ்டம ராசியில் அமர்ந்து குரு பகவானின் பார்வையைப் பெறும் கேது பகவான், உயர்ந்த சந்தர்ப்பங்களைத் தேடித் தருவார். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அனைவரிடமும் அன்புடன் நடந்து கொண்டு, நற்பெயர் வாங்குவீர்கள். நோய் நொடி உபாதைகள் எதுவும் உண்டாகாமல் காக்கப்படுவீர்கள். மேலும் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை உடனுக்குடன் கண்டு கொண்டு விலக்கிவிடுவீர்கள்.
சுக ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் மனக் கவலைகளைக் குறைத்துவிடுவார். உற்றார், உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தாய் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். செய்தொழிலில் பல வித புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். சிலருக்கு புது வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
எனினும் எவருக்கும் ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளில் சிக்கவேண்டாம். பேச்சில் உஷ்ணம் இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்குகளில் சமரசமாகச் செல்வதே நலம் பயக்கும். வாகனங்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். அதேநேரம் கைத்தொழில் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களை அடைவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்கள் உங்களைத் தேடி வந்து ஆசிகளை வழங்கும் காலகட்டம் இது.
உத் யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி, உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு, அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவöர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதேநேரம் கால நேரங்களை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும்.
வியாபாரிகள் வரவேண்டிய பண விஷயத்தில் அக்கறை காட்டுவர். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபங்களைக் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் சமயோஜித புத்தியால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உங்கள் செயலில் பின் வாங்காமல் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்கள் உங்களை நோக்கிப் படையெடுப்பார்கள்.
விவ சாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் நன்கு முடியும். விளைச்சல் நன்றாக இருக்கும். இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடலாம். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். பால் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் பெறுவார்கள். குத்தகை வருவாயும், தானிய விற்பனையும் நன்றாக இருக்கும். எனவே பாசனத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எதிர்பார்க்கும் காரியங்களில் தடை ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றி காண்பீர்கள். முக்கியத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். மேலும் தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்து, அவற்றைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சொத்துக்களின் மூலம் வருமானம் வந்து கொண்டிருக்கும்.
கலைத் துறையினர் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். அதே நேரம் அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மற்றபடி புதிய படைப்புகளை உருவாக்கும் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் உயர்ந்தவர்களின் சந்திப்பு உங்களுக்கு மன உற்சாகத்தைக் கொடுக்கும். ரசிகர்களின் ஆதரவு மழையில் நனைவீர்கள்.
பெண்ம ணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். உங்களை நாடி வரும் நண்பர்களுக்கு, நீங்கள் தயங்காமல் உதவி செய்வீர்கள். இருப்பினும் எவரிடமும் பேசும்போது கவனமாக இருக்கவும்.
மாணவமணிகள் நீண்ட காலத் திட்டங்களை தீட்ட இது உகந்த நேரம். கிரிக்கெட், ஹாக்கி போன்ற வெளி விளையாட்டுகளில் ஈடுபடலாம். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் நிறைவேற்றுவார்கள். போதிய பயிற்சிகளை மேற்கொண்டு, நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள். சூரிய நமஸ்காரம் செய்து, ஆத்ம ஒளி பெறுங்கள்.
பரிகாரம் : துர்கையம்மனை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்து தீபமேற்றி வழிபட்டு வர, சிரமங்கள் மறையும்.
——————————————————-
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
தனுசு
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு, கேது பகவான்கள் உங்கள் குடும்ப (இரண்டு), அஷ்டம(எட்டு) ராசிகளான மகரம், கடகம் ராசிகளிலிருந்து ஜன்ம (ஒன்று), களத்ர (ஏழு) ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். குரு பகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு, உங்களின் குடும்ப ஸ்தான ராசியான மகர ராசியிலிருந்து தைரிய ஸ்தான ராசியான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் கோதண்ட ராகுவாக இருப்பதால் உங்களின் நன்னடத்தை கூடும். இழிவான செயல்களிலிருந்து விடுபடுவீர்கள். வறுமை அகன்று, வருமானம் சீராகும். உற்றார்-உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து, விரோதங்களைத் தவிர்த்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் தொய்வில்லாமல் ஈடுபடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், குரு பகவானின் பார்வையைப் பெறுகிறார். எனவே இனிமையாகப் பேசி, உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். உடல் வலிமை கூடும். வீர விளையாட்டுகளிலும் ஈடுபடுவீர்கள். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். ஆதாயம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதேநேரம் கடுமையாக உழைக்க நேரிடும். உடலில் அவ்வப்போது ஏற்படும் ஆயாசத்தால், சிறப்பாகச் செயலாற்றும் ஆற்றலிருந்தாலும் மிதமான நிலையிலேயே செயல்படும் நிலைமை காணப்படும்.
இக்காலகட்டத்தில் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் சொல்வன்மையாலும், திறமையினாலும் உயர்ந்தோரிடம் சரி சமமாக வாதம் செய்து புகழ் பெறுவீர்கள். மேலும் உங்களை எதிர்ப்பவர்களையும் வெற்றி காண்பீர்கள். நுண் கலைகளில் ஆர்வமும், சாஸ்திரத்தில் தேர்ச்சியும் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும். அரசியலிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அதேநேரம் உங்கள் உள் மனதில் ஒரு பயம் குடிகொண்டிருக்கும். இதை விரட்ட யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். மேலும் நீதி, நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். மற்றபடி நீங்கள் சம்பாதிக்கும் பொருளை பத்திரமாகப் பாதுகாப்பீர்கள். மேலும் வெளிப்படையாக பழக மாட்டீர்கள். உங்கள் ரகசியங்களையும் வெளியில் கூற மாட்டீர்கள். அதேசமயம் உங்களை அண்டி வந்து உதவி கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவி செய்வீர்கள்.
உத் யோகஸ்தர்கள் தங்கள் வேலையில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், திட்டமிட்ட வேலைகளைத் தடையில்லாமல் முடித்துவிடுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இரட்டிப்பாகக் கிடைத்து மகிழ்வீர்கள். அலுவலக ரீதியான பயணங்களாலும் பணவரவு உண்டாகும். சக ஊழியர்களின் உதவியுடன் உங்கள் வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.
வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் பாக்கிகளும் வசூலாகிவிடும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் முன்னேற்றமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களின் மனம் தளராத உறுதி, உங்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்லும். நண்பர்களுடன் சேர்ந்து, புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். அதேநேரம் அவர்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேலும் அன்னியர்களை நம்பி எந்தக் கடன்களையும் கொடுக்க வேண்டாம்.
விவசாயிகளின் கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புது தானியங்களைப் பயிரிட்டு, நல்ல மகசூலைக் காண்பீர்கள். அதே சமயம் நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி புதிய குத்தகைகள் பெறுவீர்கள். கால்நடைகளாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உடல் உழைப்பை அதிகமாக நம்புவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். எவரிடமும் வாக்குவாதம், மோதல் ஆகியவற்றை மேற்கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தேவையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். கட்சியில் மதிப்பு, மரியாதை வளரும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். மக்கள் வேலையில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும். உங்கள் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து, வரவேற்புகளைப் பெறும். நிதானத்துடன் இருந்து, புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். அதோடு கர்வத்தை விட்டொழித்தால் மேலும் வளர்ச்சி அடையலாம்.
பெண்மணிகள் தம் கணவரோடு ஒற்றுமையுடன் பழகுவார்கள். அதேநேரம் காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். பெரியோர்களின் ஆதரவுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பணவரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மாணவமணிகளைப் பொறுத்தவரை சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல், படிப்பில் முழுக் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளவும்.
மற்றபடி தேக ஆரோக்கியமும், மனவளமும் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்யவும். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
பரிகாரம் : செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும், துர்கையையும் வழிபட்டு வர, அனுகூலங்கள் பிறக்கும்.
————————————————
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
மகரம்
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்கள் ஜன்ம (ஒன்று) மற்றும் களத்ர (ஏழு) ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து விரய (பன்னிரெண்டு), மற்றும் சஷ்டம (ஆறு) ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். குருபகவான் இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு, உங்களின் ஜன்ம ராசியான மகர ராசியிலிருந்து குடும்ப ராசியான கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
விரய ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களை அனாவசியச் செலவுகளையும், பயணங்களையும் செய்ய வைப்பார். தடைப்பட்டிருந்த செயல்களை எப்பாடுபட்டாவது முடித்துவிடுவீர்கள். அதற்கு உங்களின் அனுபவ அறிவு கைகொடுக்கும். உறவினர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். சிலரைப் பற்றி பேசிய பேச்சுக்காக அபவாதங்கள் உண்டாகும். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ கூடாது. மற்றபடி வருவாய்க்கு எந்தக் குறைவும் உண்டாகாது.
சஷ் டம (ஆறு) ஸ்தானத்தில், குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்ற குரு பகவானின் பார்வையில் உள்ள கேது பகவான், உங்களின் மறைமுக எதிர்ப்பாளர்களை ஓடச் செய்வார். கூட்டாளிகளும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் விகடம் கலந்திருக்கும். உற்றார், உறவினர்கள் பகை மறந்து நேசமாவார்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். தாய் வழி உறவினர்களின் மூலம் சொத்து, சுகங்கள் சேரும். பிள்ளைகள் சூட்டிகையாக இருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் பொருளாதார நிலையை உயர்த்துவார். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிறருக்குச் செய்யும் உதவிகள், அவர்களை பன்மடங்கு உயர்த்தும். அனைவரிடமும் தந்திரமாகப் பேசி, உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்கள் தங்களின் ரகசியங்களை உங்களிடம் தெரிவிப்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதோர்க்கு அந்தப் பாக்கியம் உண்டாகும். சந்தர்ப்பச் சூழலுக்கேற்ப உங்கள் செயல்களை மாற்றி, வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வம்பு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவீர்கள். அதேநேரம் உங்களின் காரியங்களை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடித்தால் சிறப்புகள் உண்டாகும்.
உத்யோகஸ்தர் கள் இடைவிடாமல் உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சல் இருந்தாலும் திட்டமிட்ட பணிகள் யாவையும் திறம்பட முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாகனம் வாங்க அலுவலகத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் நடந்து கொள்வர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலக விஷயமாக பயணங்களைச் செய்ய நேரிடும்.
வியாபாரிகளுக்கு அரசாங்கத்திலிருந்து சில அனுகூலங்கள் கிடைக்கும். எதிரிகள் அடங்கிவிடுவர். உங்கள் வியாபாரத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். வெளியிலிருந்து கடன்கள் வாங்கி, உங்கள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அதேநேரம் கூட்டாளிகள் சற்று பாராமுகமாக நடந்து கொள்வார்கள். அதனால் கணக்கு வழக்குகளை நன்கு, சரியாக வைத்துக் கொள்ளவும்.
மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நலன்களைக் காண்பீர்கள். அதிகமாக விற்பனையாகும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுத்து, லாபத்தைப் பெருக்கிக் கொள்ளவும்.
விவ சாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். தேவையான விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துக்கு நீங்கள் சிறிது செலவு செய்ய நேரிடும். விவசாயத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். நீர்வரத்தைப் பயன்படுத்தி, பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் சென்று பெறுவீர்கள். ஊடு பயிராக காய்கறிகளைப் பயிரிட்டு, மேலும் பயனடைவீர்கள்.
அர சியல்வாதிகள் அனைவருடனும் இன்முகத்துடன் பேசி, தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். உங்களின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். முக்கியப் பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று, உங்கள் காரியங்களை முடிப்பீர்கள். அதேநேரம் பேச்சில் கண்ணியம் காக்கவும்.
கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த செல்வாக்கு கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டு, பிரச்சினைகளைத் தவிர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று, செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். உங்கள் வேலைகளை நூதன முயற்சிகளால் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். அதேநேரம் உற்றார், உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உடலும், மனமும் பலப்படும். ஆன்மீக நாட்டம் கூடும். ஆடை ஆபரணங்களையும் வாங்கி மகிழ்வீர்கள். அதேசமயம் பேச்சில் நிதானம் தேவை.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சில இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோளை நோக்கித் தைரியத்துடன் முன்னேறுவீர்கள். மேலும் விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம் : “மஹாதேவ மஹாதேவ’ என்று ஜபித்து, ஈஸ்வரனை தரிசியுங்கள்; சிறப்புகள் கூடும்
———————————————————
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
கும்பம்
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்கள் விரய (பன்னிரண்டு) மற்றும் சஷ்டம (ஆறு) ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து உங்களின் லாப (பதினொன்று), பூர்வபுண்ய(ஐந்து) ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். குரு பகவான் உங்களின் விரய (பன்னிரெண்டு) ராசியான மகர ராசியிலிருந்து, ஜன்ம (ஒன்று) ராசியான கும்ப ராசிக்கு இந்த மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்குப் பெயர்ச்சியாகிறார்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் கோதண்ட ராகுவாக இருப்பதால், மூத்த சகோதர-சகோதரிகளின் உதவியால் பெரிய அளவில் லாபங்களைக் காண்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு சம்பந்தத்துடன் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குழந்தைகள் வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு தேடி வரும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படாது. மனதும், உடலும் உற்சாகத்துடன் இருக்கும்.
பூர்வபுண்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்கள் வேலைகளைச் சரியான இலக்கில் செல்ல வைப்பார். பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும். செல்வந்தர்களின் சேர்க்கையினால் வாழ்க்கை வசதிகள் கூடும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உங்கள் தொழிலில் உண்மை, நீதி போன்றவைகளைக் கடைபிடித்து நற்பெயர் வாங்குவீர்கள். அதேநேரம் உங்களை தூற்றுபவர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். இந்தக் காலத்தில் குரு பகவான் ஜன்ம ராசியில் அமர்ந்திருப்பதால் உங்கள் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். பல புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். உங்கள் கீழ் வேலை செய்பவர்கள் நன்றி பாராட்டுவார்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். தந்தைக்குப் புகழ், பெயர் உண்டாகும். மதியூகத்தால் அறிஞர்களிடம் விவாதித்து, நற்பெயர் வாங்குவீர்கள். அதேநேரம் பணம் சம்பாதிக்க அலைந்து திரிய பிரியப்பட மாட்டீர்கள். எனினும் இருக்கும் இடத்திற்கே பணம் வந்து சேரும்!
உத்யோகஸ்தர்களுக்கு வேலைகளில் பளு அதிகரித்தாலும், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். சாதுர்யமாகச் செயல்படுவீர்கள். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதேநேரம் உங்கள் பொறுப்புகளை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மேலும் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்பட வேண்டும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். மனத் தளர்ச்சிக்கு இடம் தராமல் நடந்து கொண்டால் பிரச்சினையில்லாமல் தப்பிக்கலாம்.
வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, விற்பனையைப் பெருக்குவார்கள். சிறு தடைகள் ஏற்படினும் அவற்றை நன்கு சமாளித்துவிடுவீர்கள். உங்களைத் தேடி, வர வேண்டிய பணம் வந்து சேரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். இந்தக் காலகட்டத்தில் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். அதேநேரம் நன்கு யோசித்து புதிய முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். மேலும் வாகனங்களைப் பழுது பார்க்க செலவு செய்ய நேரிடும்.
விவசாயிக ளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். அதே சமயம் விவசாயப் பணிகள் சுமுகமாக முடியும். தானிய விற்பனையின் மூலம், எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். அறுவடை விஷயமாக ஆழ்ந்து திட்டம் தீட்டுவீர்கள். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசி யல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்கள் சொல்லுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்ட எதிரிகள் விலகிவிடுவார்கள். கட்சி மேலிடத்தின் கரிசனப் பார்வை உங்கள் மீது விழுந்து, புதிய பணிகளைச் செய்வீர்கள். அதேநேரம் எதையும் தீர ஆலோசித்த பின்பே செயல்படுத்தவும்.
கலைத்துறையினருக்கு துறையில் பிரச்சினைகள் தோன்றினாலும், முடிவு சாதகமாகவே இருக்கும். உங்களின் சீரிய முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
அதேசமயம் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி நண்பர்களால் நன்மை அடைவீர்கள். பயணங்கள் மூலம் பண வரவையும் எதிர்பார்க்கலாம்.
பெண்மணி கள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். எனினும் இக்கால கட்டத்தில் காரணமில்லாமல் மன அமைதி குறைய வாய்ப்புள்ளது. அதனால் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். பணவரவு நன்றாக இருந்தாலும் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில்லறைச் செலவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். சிரத்தையாகப் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானங்களைச் செய்து, உங்கள் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளவும். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நடந்து கொள்ளவும்.
பரிகாரம் : பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வாருங்கள்; கஷ்டங்கள் நீங்கும். முடிந்தால் விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தைப் படித்து வர அல்லது கேஸட்டில் கேட்டும் வர, சிரமங்கள் குறையும்.
——————————————————-
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009
மீனம்
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்களின் லாப (பதினொன்று) மற்றும் பூர்வபுண்ணிய (ஐந்து) ஸ்தான ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து உங்கள் தொழில் (பத்து), சுக (நான்கு) ஸ்தான ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு குருபகவான், உங்கள் லாப (பதினொன்று) ஸ்தான ராசியிலிருந்து விரய (பன்னிரண்டு) ஸ்தான ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், செய்தொழிலில் அபிவிருத்திகளைக் காண்பீர்கள். நல்லவர்களின் நேசமும், நண்பர்களின் உதவியும் கிடைத்து, வெற்றிகரமாக உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து கெடுபிடிகள் குறையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த தடைகள் மறைந்து, சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். மேலும் வெளியில் கொடுத்த கடன்களும் திரும்பக் கைக்கு வந்து சேரும். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களை உடனுக்குடன் மன்னித்து மறந்துவிடுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பெற்று சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான், உங்கள் வாழ்க்கையில் சுகங்களை கூட்டிக் கொடுப்பார். இதமாகப் பேசி உங்கள் காரியங்களை எளிதாக முடித்துவிடுவீர்கள். பல நாட்களாக வாட்டி வந்த உடல் உபாதைகளும், மன வருத்தங்களும் விலகிவிடும். விரோத மனப்பான்மையுடன் இருக்கும் உறவினர்களிடம் நேசக்கரம் நீட்டி இணக்கமாவீர்கள். சுற்று வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கல்வியில் சிறப்பான அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இந் தக் காலத்தில் குரு பகவானின் சஞ்சாரத்தினால் எதிர்பார்த்த வருவாய் இல்லையென்றாலும், தேவைக்கேற்றவாறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். சுப காரியங்கள் சீரிய முயற்சிகளுக்குப் பிறகே கைகூடும். உங்கள் காரியங்களை ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் எவருக்கும் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். உடல் நலத்தைப் பேணிக் காக்க யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் குழந்தைகள் படிப்பு, திருமணம் போன்ற காரியங்கள் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். உங்கள் சுய மரியாதையை இழக்காமல் காரியமாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையக் காண்பார்கள். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அவ்வப்போது வேலையில் கூடும் பளுவை சக ஊழியர்களின் துணையோடு குறைத்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஊதியம், விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். அதேநேரம் உங்களின் செயல்கள் எதையும், குறுக்கு வழியில் செய்ய முயல வேண்டாம்.
வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக கிடைக்கும். அதோடு மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மக்கள் விரும்பும் பொருட்களை வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். வியாபாரத்தில் சிறு இடையூறுகள் தோன்றினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. எனினும், நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளில் ஈடுபடவும். மனதில் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். புதிய சாதனங்கள் மூலம் விவசாயத்தைப் பெருக்குவீர்கள். விவசாயப் பணிகளைச் செய்து முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றியாகவே முடியும். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். புது மாற்றுப் பயிர்களையும் உற்பத்தி செய்து லாபத்தைப் பெருக்கலாம். புதிய குத்தகைகளும் உங்களை நாடி வரும். அதே சமயம் தேவையற்ற வரப்பு விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
அர சியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். எனினும் எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களிடம் கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். அவைகளை நேர்த்தியாகச் செய்து கொடுத்து பதவி உயர்வையும், பாராட்டையும் பெறுவீர்கள்.
கலைத் துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். பணவரவுக்கும் குறைவு வராது. உங்கள் திறமையும் பளிச்சிடும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றி பெறும். புதிய வாகனங்களை வாங்கும் பாக்யமும் கிடைக்கும்.
பெண்மணி கள் ஆடை அணிமணிகளை வாங்கி மகிழ்வார்கள். உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அதேநேரம் பெற்றோருக்கு உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனினும் மனதில் இருப்பதை உறவினர்கள் மற்றும் மூத்த சகோதர-சகோதரிகளிடமும் கொட்டிவிட வேண்டாம். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மற்றபடி மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துவீர்கள்.
மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவதற்கு இது உகந்த நேரம். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். யோகா, ப்ராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகியவைகளைச் செய்யவும். மற்றபடி எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயலாக்குவீர்கள்.
பரிகாரம் : விநாயகரையும், நந்திகேஸ்வரரையும் அருகம்புல் மாலையிட்டு வழிபட்டு வர, சிறப்புகள் தேடி வரும்.’
—–கே.சி.எஸ். ஐயர்
பேரைச் சொல்லக் கூட… (ஆன்மிகம்)
பகவானுக்கு பக்தர்கள் மீது பிரியம்; பக்தர்களுக்கு பகவான் மீது பிரியம். இருவருக்குமே பகவான் நாமாக்களின் மீது மிகப் பிரியம். பக்தர்கள் எங்கே நாம சங்கீர்த்தனம் செய்கின்றனரோ, அங்கே பகவான் நாராயணன் வந்து விடுகிறானாம். எங்கே நாராயணன் இருக்கிறானோ, அங்கே ஸ்ரீ மகாலட்சுமியும் வந்துவிடுகிறாளாம்.
பகவான் நாராயணனும், மகாலட்சுமியும் இருக்கும் இடத்தில் மங்களம் பொங்கி வழியும். விஷயம் தெரிந்தவர்கள் அடிக்கடி, “நாராயணா, கிருஷ்ணா, கோவிந்தா…’ என்று முணு, முணுத்துக் கொண்டே இருப்பர்; தெரியாதவர்கள் பரிகாசம் செய்து கொண்டே போவர். நாமா சொன்னவன் நற்கதி பெறுகிறான்; பரிகாசம் செய்தவன் அதோகதியடைகிறான்!
வைகுண்டம் போக, ஸ்ரீராமன் புறப்படும்போது, ஆஞ்சநேயரைப் பார்த்து, “நீயும் வைகுண்டம் வருகிறாயா?’ என்று கேட்டாராம். அதற்கு, “அங்கே ஸ்ரீமத் ராமாயணம் பிரவசனம் உண்டா, ராம நாமா சொல்லப்படுமா?’ என்று கேட்டாராம் ஆஞ்சநேயர். அதற்கு, ராமன், “அங்கே அதெல்லாம் கிடையாது! சதா, என்னை தரிசனம் செய்து கொண்டிருக்கலாம்; அவ்வளவு தான். ராமாயணம், ராமநாமா எல்லாம் இங்கு பூலோகத்தில் தான்!’ என்றாராம்.
“அப்படியானால், எனக்கு ராம நாமா இல்லாத வைகுண்டம் வேண்டாம். நான், ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டும், ராமாயணம் கேட்டுக் கொண்டும் ஆனந்தமாக இங்கேயே இருந்து விடுகிறேன்!’ என்றாராம் ஆஞ்சநேயர். ராமனும் அப்படியே அனுக்ரகம் செய்தாராம். அதனால், இன்றும் ராமாயணம் நடக்கும் இடத்திலும், ராம நாமம் கேட்கும் இடத்திலும் சிரஞ்சீவியாக ஆஞ்சநேயர் இருந்து கொண்டிருப்பதாகச் சொல்வர்.
பகவான் நாமா வை சொல்பவர்கள் பகவானை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். பகவானுக்கு அபசாரம் செய்து விட்டால் கூட, அவர் பொறுத்துக் கொள்வார்; பக்தனுக்கு அபசாரம் செய்து விட்டால், அவர் பொறுக்க மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள பக்தியையும், அன்பையும் கண்டு அவர்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் பகவான் பொறுத்துக் கொள்வதால், அவனுக்கு, “சஹிஷ்ணு’ என்று பெயர். பகவானுடைய ஆயிரம் நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் இப்படி பொருள் உண்டு.
மனிதன் செய்யும் எவ்வளவோ தவறுகளை அவன் பொறுத்துக் கொள்கிறான். அளவு மீறிப் போகும் போது தான் பொறுமையை இழக்கிறான்; தண்டிக்கிறான். சிசுபாலன் கதை தெரிந்திருக்கும். கிருஷ்ணனால் தான் அவனுக்கு வதம் என்று சிசுபாலனின் தாயாருக்குத் தெரிந்தது.
கிருஷ்ணனை, “நீ, என் மகனை கொன்று விடக் கூடாது…’ என்று வேண்டினாள்.
அதற்கு, “அவன், என்னை நூறு முறை திட்டும் வரையில் பொறுத்துக் கொள்கிறேன்; அதற்கு மேல் போனால் வதம் செய்து விடுவேன்…’ என்றார் கிருஷ்ணன். “அப்படியானால், ஒரு நாளைக்கு நூறு என்று வைத்துக் கொள்!’ என்று (இவளும், கிருஷ்ணனுக்கு ஒரு அத்தை உறவு!) வேண்டிக் கொண்டாள்; பகவானும் சரி என்றார்.
அன்று முதல் கிருஷ்ணனை 100 தடவை திட்டிவிட்டு பேசாமலிருந்து விடுவான் சிசுபாலன்; பகவானும் பொறுத்துக் கொள்வார். ராஜசூய யாகத்தின்போது, தன்னை மறந்து 100 தடவைக்கு மேல் கண்ணனைத் திட்டி விட்டான் சிசுபாலன். சக்ராயுதத்தால் உடனே அவனை வதம் செய்துவிட்டார் பகவான்.
ஆக, பகவான் ரொம்பவும் பொறுமையுள்ளவர்; கருணை உள்ளவர்; பக்த ரட்சகர். அவரது நாமாவை சொல்லி அவரை உபாசித்து வந்தால், நம் நலன்களை கவனித்துக் கொள்வார். கடைசியில், மோட்சத்தையும் அளிக்கிறார். இதைச் செய்வதில் நமக்கு என்ன சிரமம்?